வலிகள்
பலர் கண்ணீருக்கு பின்னால்
மட்டுமல்ல புன்னகைக்கும்
பின்னால் ஒளிந்திருக்கும்
மறக்கவே முடியாத வலிகள்..!!
ஒருவர் காயத்தில் அவதிப்படுகிறார்
என்றால் ஆறுதல் கூற ஆயிரம்
பேர் வருகிறார்கள் அவருக்கு வரும்போதுதான்
வலியின் அழுத்தம் தெரியும்..!!
பூப்போன்ற மனதை
புண்ணாக்க பலர் உள்ளார்
பலரும் முன் புன்னகையால்
சிலரும் முன் கண்ணீராலும்
இந்த வலியை வெளிப்படுத்த
வேண்டியிருக்கிறது..!!
வலியின் உச்சத்தை எதைக்கொண்டுநான் தீர்ப்பது
இறைவா..!!