விடுதலை

ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருப்பேன் போல,
ஒரு நொடிக்கூட
உன்முன்
வந்ததில்லை..
இன்று...
உந்தன் முகம்
காணும்
அரங்கேற்றத்திற்கு
அழைப்பின்றி
வந்திருக்கிறேன்,
தயவுகூர்ந்து
தவணைமுறையிலாவது
தலையசைத்துவிடு
உந்தன்
சம்மதத்தை...
அந்த
ஒற்றைவார்த்தையிலாவது
என் சகலமும்
சடுகுடு ஆடும்
ஆட்டத்தை
நிறுத்தி
விடுதலை அடையட்டும்!!!!

எழுதியவர் : (19-Apr-22, 7:53 am)
சேர்த்தது : சுடர்விழி ரா
Tanglish : viduthalai
பார்வை : 103

மேலே