மாப்பிள்ளை ஊர்வலத்தில் கலாட்டா

ஒருவர்: ஏங்க, கல்யாண ஊர்வலம் பாதியிலே நின்னுபோச்சு?
இன்னொருவர்: ஊர்வலம் சென்ற கார் பஞ்சர் ஆகிவிட்டதாம்.

ஒருவர்: கார் பஞ்சர் ஆகிவிட்டது. இப்போது மாப்பிள்ளை ஏன் நடந்தே போகிறார்?
இன்னொருவர்: அவருடைய வரப்போகும் மாமனார் " கார் பஞ்சர் ஆனாலும் ஊர்வலம் நடந்தே தீரும்" என்று மாப்பிள்ளையிடம் சொன்னதால்.

ஒருவர்: கொஞ்ச நேரம் வரைக்கும் மாப்பிள்ளை பெரிய மாலை போட்டிருந்தார். இப்போது ஏன் திடீரென்று சின்ன மாலை போட்டுகொண்டுவிட்டார்?
இன்னொருவர்: அது முன்னாடியே போட்டுக்கொண்ட பெரிய ரோஜா மாலை தான். இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பதால், சிரமம் தெரியாமல் இருக்க, மாப்பிள்ளை நடந்து செல்லும்போது, வழி முழுவதும், அதில் இருந்த ரோஜா இதழ்களை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டாராம்.

ஒருவர்: என்ன, இவ்வளவு பெண்கள் மாப்பிள்ளையை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்?
இன்னொருவர்: கல்யாண சத்திரம் இன்னும் நூறு மீட்டர் தூரம் இருக்கையில், மாப்பிள்ளை தனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது என்று அவருடன் நடந்து வந்த சில பெண்களிடம் சொன்னதால், இந்த பெண்கள் அவரை தூக்கிக்கொண்டு நடக்கிறாரகள்.
ஒருவர்: ஏன், தடியன்கள் மாதிரி இருபது இளைஞர்கள் உடன் செல்கிறார்களே, அவர்கள் மாப்பிள்ளையை தூக்கிச்செல்ல கூடாதா?
இன்னொருவர்: மாப்பிள்ளைக்கு, ஆம்பிளைங்க தூக்கினா ரொம்ப வெட்கமாம்.

ஒருவர்: இப்போது திடீரென்று அதே இளைஞர்கள் மாப்பிள்ளையை பலவந்தமாக ஏன் அந்த பெண்களிடமிருந்து கீழே இழுக்கிறார்கள்?
இன்னொருவர்: பெண்கள் அவரை அலுங்காமல் குலுங்காமல் தூக்கிவருவதால் மாப்பிள்ளைக்கு சுகமாக தூக்கம் வருகிறதாம். அதனால், மாப்பிள்ளை பெண்கள் அவரை தூக்கியவண்ணம் இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார். மாப்பிள்ளை மணமகளுடன் மேடையில் அமரவேண்டும் என்பதால், இந்த இளைஞர்கள் அவரை இப்போது வலுக்கட்டாயமாக பெண்களிடமிருந்து அவரை மீட்டு, சத்திரத்திற்கு உள்ளே அழைத்து செல்கிறார்கள்.

ஒருவர்: என்னங்க, கன்றாவியாக இருக்குது. இன்று ஜான்வாசம் நாளை தான் கல்யாணம். ஆனால் இன்று இரவே மாப்பிள்ளையும் மணமகளும் ஒரே அறையில் உறங்க போகிறார்களாமே?
இன்னொருவர்: மாப்பிள்ளைக்கு முதலிரவு பற்றி ஒன்றும் தெரியாதாம். அதனால் மணப்பெண்ணே அவரிடம் " நாம் இன்று ரிஹர்சல் பார்த்துக்கொள்ளலாம் " என்றதால் இருவரும் சேர்ந்து உறங்க ஏற்பாடு.

ஒருவர்: என்னப்பா, அவர்களின் அறையில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை விளக்கு எரிகிறது . ஐந்து நிமிடம் கழித்து அணைந்துவிடுகிறது. மீண்டும் எரிகிறது. மீண்டும் அணைகிறது?
இன்னொருவர்: நான் நினைக்கிறேன், ரிஹர்சல் என்பதால், மணப்பெண் அவருக்கு நடிக்க வேண்டிய காட்சியை சொல்லித்தருகையில் லைட் எரிகிறது. அவர்கள் அதை ஒத்திகை பார்க்கும்போது, லைட் அணைந்துவிடுகிறது.

ஒருவர்: ஆமாம் , நீங்க யாருங்க?
இன்னொருவர்: நான் மணப்பெண்ணின் தோழன். ஆமாம் நீங்க யாரு?
ஒருவர்: நான் மாப்பிள்ளையின் தோழி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-22, 10:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

சிறந்த நகைச்சுவைகள்

மேலே