காதலின் ஊற்றுக்கண்கள்
காதலின் ஊற்றுக் கண்கள்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷⚘⚘
பார்வை இல்லா
மனிதருக்கு
விழிகள் ஏன் ?
விழிகள் இல்லா
மனிதருக்கு
மொழிகள் ஏன் ?
விழிகளும் மொழிகளும்
அருளே என
அறியாதோர்க்கு
அனைத்தும் ஏன் ?
உங்கள் பார்வையை
வாசித்து
நேசிக்க யாசிக்கும்
திசைப்பக்கம் திருப்புங்கள்
விழிகளிரண்டையும் !!
விழிகள் கருணையின்
கண்களாக
மொழிகள் காதலின்
ஊற்றுக் கண்களாகட்டும்!!
-யாதுமறியான்.