நம்மள யாருடா இனிமேல் மதிப்பாங்க

ஏன்டா கொள்ளுப் பேரா, நம்ம குடும்பப் பாரம்பரியத்தையே குழி தோண்டி பொதைச்சுட்டயே! இனிமேல் நம்ம தமிழ் சனங்கள் நம்மள மதிப்பாங்களா?
@@@@@@@
நான் என்ன தாத்தா பண்ணிட்டேன்?
@@@###
என்னோட கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்து நம்ம குடும்பத்தில பிறக்கிற குழந்தைகளுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறததுதான் நம்ம குடும்பப் பாரம்பரியம். நீ உங் குழந்தைகள் இரண்டு பேருக்கும் தமிழ்ப் பேருங்கள வச்சு நம்ம குடும்பத்துக்கு இழிவுத் தேடிக் கொடுத்திட்டயே. இனிமே தமிழர்கள் யாராவது நம்மள மதிப்பாங்களா? ஏன்டா உனக்கு புத்தி கெட்டுப் போச்சு?

எழுதியவர் : மலர் . (14-Mar-23, 10:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 96

மேலே