திரும்பி பாரேன்டி திருமகளே
திரும்பி பாரேன்டி திருமகளே
××××××××××××××××××××××××××
கரும்பாக இனித்திடும்
கனிவானப் பேச்சாலே/
இரும்பான இதயத்துள்
இணைந்திட்டக் காதலே/
அரும்பிடும் மலராக
ஆனந்தமாக வாழ்ந்திட/
ஊரும் சுற்றமும்
உற்றாரும் புகழுமே/
உரும்(அச்சம்) வேண்டாம்
உனைக் கைவிடேன்/
திரும்பிப் பாரேன்டி
திருமகளாக வந்திடவே/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்