குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கிற் கூட்டம் - பாடல் 51

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

(இ-ள்) அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானா யிவ்வாறு கூறினால் அதற்கு நானென் சொல்வேனென்று தன்னுள்ளே வருந்துதல்.

இதுவுமது

கட்டளைக் கலித்துறை

தடமார் விசும்பினுக் கோர்மதி பார்க்கெந் தலைவ(ர்)மதி
யிடமார் மதியிரண் டென்றிருந் தேமிரு மாமதியுங்
கடமார் களிற்றன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
மடமா னிரண்டு *மறுச்செய்த தேதினி வாய்நமக்கே! 51

*வடுச்செய்ததென்றும் பாடம்.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (10-Jun-24, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே