இனியும் அகதியா..............
இனியும் அகதியா..............
ஆழ்பவன் அச்சத்தால் அயல் நாடு ஓட
பாழ் படும் அலை எங்கள் தமிழரை விழுங்க
எது என்ன விதியோ ?-தமிழர்க்கு
எவன் தந்த சதியோ?
ஆண்டவன் எங்கே?
காப்பவரும் எங்கே?
மடிகின்ற உயிர்க்கெல்லை
ஈழத்தில்லில்லை
மடிந்தவர் எல்லாம்
மனிதர்கள் என்று
மனம் கலங்க வேறு சனம் கூட இல்லை
காலம் எதிரி
கடவுள் எதிரி - ஈழத்தவனுக்கு
எல்லா இனமும் எதிரி
ஐ.நாக்கு என்ன?
அமேரிக்காக்கு என்ன?
ஈழத்தமிழர்க்கு
ஆக்கிரமிப்பு நடந்தால்
உலகத்துக்குத்தான் என்ன?
கடவுள் இல்லாத கோயில்
மாலுமி இல்லாத கப்பல்
இனியும் என்றும் அடிமையோ
நாங்கள் ...............................