உறங்குகின்ற சமுதாயம்...
பூட்டி வைத்த வீடாய் மாறிப்போனது அரசியல்வாதிகளின்..
பிரதி வாதங்கள்...
பணத்தையும், பதவியையும் மட்டும் குறியாய் கொண்டு...
கட்சிக்கு கட்சி தாவினும் இழிவின்றி , பழியின்றி ....
அரியணை ஏறத்துடிக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரைகள் கிழிக்கபடுவது எப்போது?
கொள்கை, கொள்கை என்று மக்களின் கோரிக்கைகள் முடங்கி கிடப்பது ஏனோ?
விழித்தெழும் நாய் கூட தன் வழியை தானே தேடுகிறது...
எம் தேசத்தின் வரிப்பணம் இறைக்கபடுவது ஏழைகளுக்கு அல்ல ...
உங்கள் கணக்கினில் வராத கருப்பு பணமாய் மாறுவதற்கே!
ஆதாயமில்லா வாழ்வு உங்கள் வாழ்வென மேடைதனில் முழக்கமிடும் .. உன் வாழ்வா...
ஆதாயமட்றது... என் சமுதாயம் விழிப்பது எப்போது?