அன்புள்ள தோழியே...

அறிமுகப்பட்டேன்...

உன்னிடம்.. தூய்மையான உனது

அன்பினில் அடைபட்டேன்...

குறிஞ்சி மலர் போல் எப்போதாவது

நான் உதிர்த்த புன்னகையின் சுவடுகளில்

சோகபதிவை நான் சொல்லாமலே தெரிந்து கொண்டவளே...

என் மனபாரம் முழுவதும் இறக்கி விடுகிறேன்..

உன் திரு முகம் பார்த்து...

கள்ளமோ, காமமோ, ஊடலோ, கூடலோ

ஒன்றாமல் ...

உன்னதமாய் கிடைக்கும் உன் உரிமை நட்பை ....

ஒரு போதும் நான் இலவேன்.....

எழுதியவர் : காளிதாசன்... (28-Dec-11, 3:50 pm)
பார்வை : 299

மேலே