மார்கழி பூவே

தேகம் குளிருது நெஞ்சு சிலுக்குது
மஞ்சவெயிலு மதி மயக்குது
வாடகாத்தும் எனை வாட்டியெடுக்குது
ஆவிபறக்க வந்த ஆகாரமும் தாவி பறக்குது

இன்ச் இன்ச்சா இஞ்சி முத்தம் வச்சி கலங்கடிக்குற
பிஞ்சு நெஞ்ச பஞ்சு போல பதற வைக்கிற
கட்டுபாட்டை மீறிதா கட்டியணைக்குற
அத்துமீறி எனையே ஆள பாக்குற

உதிரமும் உறைஞ்சிதா போகுது
சுவாசமும் குறைஞ்சியே சுழலுது
உன் வாசம் மட்டும் வசமாகுது -மாசமோ
மார்கழி மாசமாகுது பனி பிரசவமாகுது

முட்டிமோதி முடங்கிதான் போற
காலை வெயிலு வந்தும் கெறங்கியே தான் வாரேன்
என் பணி தோய்ந்திருக்க - உன் பனி
அப்பப்பா முன்பனி பின்பனி தான்

மாறுமோ மார்கழி
தீருமோ என் மீதான பழி
வாராதோ வசந்தம்
எனையும் கொஞ்சம் பாராதோ

எழுதியவர் : பிரகாஷ்சோனா (2-Jan-12, 3:50 pm)
சேர்த்தது : prakash sona
பார்வை : 571

மேலே