இதுதானே கவிஞன் உலகம்

பவுர்ணமி நானருந்த
பாலூற்றிக் கொடுக்கும்
இரவும் என் மீசையில்
இனிதாய் டை அடிக்கும்
இளமையை தக்க வைக்க
இனிதாய் தென்றல் தழுவும்
என் நினைவுகளுக்குள் மலர் இதழ்கள்
ஏராளமாய் முத்தம் வழங்கும்
இதுதானே கவிஞன் உலகம்
இப்படித்தான் சொர்க்கம் இருக்குமோ ?

எழுதியவர் : (28-Mar-12, 12:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 111

மேலே