கவிதைகளை நேசியுங்கள் ..
.....
உங்களுக்கென்று ஒரு சாராரை ஏற்படுத்தி
அவர்களை மட்டுமே ஏற்றம்படுத்தி ,
எழுத்துலகில் உலவும் (ஒரு சில )
நண்பர்களே.........
உங்களுக்கெல்லாம் ஓன்று
கூறிட விரும்புகிறேன் ........
தயவுசெய்து நண்பர்களே
கவிதைகளை மதியுங்கள் !
ஆணா, பெண்ணா ,
என்பதை விடுத்து .........
உங்கள் கவிதைகளுக்கு
" நன்று" சொல்பவர்களின் .......
வரிகளுக்கு மட்டுமே
பதிலளிப்பதை விடுத்து .......
உணர்ச்சிமயமான, உன்னதமான ,
கவிதைகளை படியுங்கள் !
உங்களுக்குள்ளே மட்டுமே
போற்றுதலை விடுத்து ........
ஒருவர்கூட பார்க்காத
அருமையான அற்புதமான
கவிதைகள் பல இங்குண்டு
அவற்றையும் சற்றே நேரம்
ஒதுக்கி பாருங்கள் !
ஒருவர்கூட பார்க்கவில்லையே .....
ஒருவர்கூட கருத்து சொல்லவில்லையே ........
என்று ஆதங்கத்துடன் எழுதும்
கவிஞர்களை ஊக்குவியுங்கள் .......
புதுவித சிந்தனைகளை ......
புரட்சிகரமான எழுத்துகளை ........
மலரினும் மெல்லிய
வர்ணிப்புகளை வெளிப்படுதிடும் பலர் .......
யாராலும் அறியப்படாது
உள்ளனர் இங்கே .......
அன்பானவர்களே , தயவு செய்து ......
அவர்களையும் ஆதரியுங்கள் ........
மதிப்பெண்களால் அல்ல ........
நம் மனங்களால் !
இப்படிக்கு , உங்களை போல் ....
கவிஞர்களின் வரிகளை படிக்கும் ,
நட்பான வாசகன் .......