என் தோழி

முதுகலைபடிப்பின் முதல் நாள்
வகுப்பறையில் ஏதோ பெயர்
சொல்லி அழைத்தாய்.

உன் அழைப்பிற்கு செவி
மடுக்காமல் இருந்திருந்தால்
இன்று என் மனம் பிரிவை
கண்டு அஞ்சி இருக்காது.

உன்னை பற்றி அறியாமல்
அனல் வீசும் உன் ஈரப்புன்னைகையில்
குளிர் காய்ந்தோம்.

உன்மேல் துன்பம் அடைமழையாய்
பெய்தாலும் நட்பின் சாரலில்
மூழ்கி திளைத்தாய்.

என்றோ ஒருநாள் திருமணம்
செய்வாய் , உன் அழைப்பில்
நம் நட்பு புத்துணர்ச்சி பெறும்
என்று நினைத்தேன்.

காலம் சென்ற கனவாய்
உன் திருமணம் காற்றில் கரைந்தது
தோல்வி பழகியதால் அதை உணர
மனம் மறுத்தது .

நாம் பழகிய இவ்விரு ஆண்டுகள்
நட்பின் நினைவலைகளாய்
என் நாட்குறிப்பில் காலசுவடுகளாய்
கரை புரண்டு ஓடும்.

கள்ளம் கபடமற்ற உன் மனதில்
சஞ்சலம் கலந்ததால் மணவாழ்வில்
தீர்வு என்ற வாசலில் நுழைய
தடை விதிக்கிறது.

வாழ்வின் இன்பம் ஒத்து போதலில் தொடர்கிறது . தன்னுணர்ச்சிகளை
அடக்கி ஆள கற்றுக்கொள்.

மனதின் எண்ணங்களை
உன் அறிவுடன் கலந்து
சற்று சிந்தித்து பார்.
இரு மனதை ஒரு மனமாக்கி
தைரியமாக செயல்படு.

காலம் உன்போக்கில் சுழலும்,
கடவுள் உன்னில் வலம் வருவார்,
நீயும் ஒரு நாள் அழகிய கனியை சுவைப்பாய்.


என்றும் என் வாழ்த்துக்கள் .

எழுதியவர் : பிரியா நாகப்பன் (25-May-12, 10:59 am)
சேர்த்தது : priya nagappan
Tanglish : en thozhi
பார்வை : 536

மேலே