நீ எனது வரம்...நான்?
உன்னைப் பற்றிய பெருமை...
எனக்கு எப்பொழுதும் அதிகம்.
உனது நளினமாகட்டும்...
உனது இனிய இசையாகட்டும்..
யாரையும் ஈர்க்கும் உனது மொழியாகட்டும்...
உனது பணிவாகட்டும்...
எல்லாம் எனக்கான வரம்.
உண்மையில்...
உன்னால்தான் நான் அறியப்பட்டேன்...
நம்மைச் சார்ந்த எல்லோரிடமும்.
நம்முடைய காதல்...
கடவுளாலும்...
பெற்றோராலுமே...
ஆசிர்வதிக்கப்பட்டது.
என்றாலும்...
நம் திருமணத்திற்குப் பின்னரும் ...
நீ
பழைய கனவுகளோடு திரிவதுதான்
எனக்குப் பிடிக்கவில்லை.
நான்தான்...
மூன்று முடிச்சோடு...
நீ வசிப்பதற்கான
கூட்டையும் பரிசளித்தேனே...
நீ ஏன் இன்னமும்...
உன் பிய்த்தெறியப்பட்ட...
சிறகுகளுக்காக..
மன்றாடிக் கொண்டிருக்கிறாய்?...