தீராத காதலோடு காத்திருக்கிறேன் நான் .....

ஆழமன சோலையில்
எப்போதோ நாம்
இருந்து அழுததாய்
ஞாபகம்!!!!!!

உன் ஞாபக கணக்கில்
அவ்வப்போது என்
நினைவு வரவு
வைக்கப்பட்டதாய்
அறிகிறேன்...

என் நினைவு களில்
நீங்காத ஞாபகங்களை
மறக்காமல்
பொக்கிஷமாய்
பூட்டி வைத்து
இருக்கிறேன்

நீ விட்டு
போனால்
நான் பட்டு
போவேன் என்று
உன் ஞாபக
தூறல்களை
சிந்தி விட்டு
போகிறாயோ ?
என் கண்மணி !

வந்து விடு என்னோடு
தீராத காதலோடு
காத்திருக்கிறேன்
நான் .....
வந்து விடு என்னோடு.....

எழுதியவர் : info.ambiga (15-Jul-12, 8:30 pm)
பார்வை : 235

மேலே