நேசமுள்ள இந்திய இராணுவமே..!!
மீன்பிடிக்கப் போகிறோம்
அடிபட்டுத் திரும்புகிறோம்
மீனுமில்லை வலையுமில்லை...
மொத்தத்தில் எதுவுமில்லை
சிலநேரம் உயிருமில்லை
அடிப்பது எப்படியென்று
அவனுக்கு கற்றுக்கொடுத்தீர்!
அடிவாங்குவது எப்படியென்றாவது
எங்களுக்கு சொல்லிக்கொடுப்பீர்,
எங்களின் உயிராவது மிஞ்சும்...