காதல் கவிதை
என் விரல்களுக்குள் யுத்தம்
உன்னை முதலில் யார்
வர்ணித்து எழுதுவது என்று..."
என் பேனாக்களுக்குள் யுத்தம்
உன்னை வர்ணிக்கும்
விரல்களை யார்
முதலில் சென்றடைவது என்று ..."
உன்னை வர்ணிக்கும்
எழுத்துக்களுக்குள்
யுத்தம் உன் உதடுகளால் யார்
முதலில் வாசிக்க படவேண்டும்
என்று ..."
எனக்குள் யுத்தம்
நீ என்னை ஏற்றுக்கொள்வாயா
என்று"..