ராஜ் குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜ் குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 15-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 31 |
தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்--- ராஜ்
ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அதை யாருக்கும்
கேட்கப் போவதில்லை !
ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அதை யாருக்கும்
கேட்கப் போவதில்லை !
உண்மைதான்
பெரும்பிழையின்
கோர்வை நான் !
என்னை தண்டித்துக் கொண்டே
இருக்கிறது உலகம்
மன்னித்துக் கொண்டே
அணைக்கிறாய் நீ !
குற்றம் சொல்லியே
குத்திக் கொல்கிறது உலகம்
கூட இருந்தே
திருத்திக் கொண்டிருக்கிறாய் நீ !
எடை போட்டு க் குறை
சொல்கிறது உலகம் !
உனைநிரப்பி என் உயிருக்கு
பலம் கூட்டுகிறாய் நீ !
குற்றவாளி என்கிறார்கள்
குறையில்லா சில நீதிபதிகள்..
அன்பெனும் ஆழி
என்கிறாய் நீ !
அழகாக அழகாக்கி
நேசிக்கிறாய் நீ !
ஏமாற்றுகிறேன்
என்கிறது உலகம் !
எனக்குத் தெரியும் நீ
யாரென்றென்கிறாய் !
நாடகமாடுகிறேன்
என்கிறார்கள்
நயமான நல்லவர்கள் !
நா அடக்கம் கற்றுப்
பேசாமல் பொறுத்திரு
எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்
எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..
கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !
நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..
கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !
நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !
எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை- ராஜ்
அழகு தேவதையென
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்!!!
வலம் வரவாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையிலே நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்!
பொன் நகையை நீ கொண்டு
வரவேண்டாம்
புன்னகையை கொண்டு
வந்தால் போதும்!
பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு வந்தால் போதும்!
வந்தால் போதும்!!
நான் என் மரணம் பற்றி
கவலை படுவதில்லை.
ஆனால்,
என் கவலை எல்லாம்
என் மரணத்திற்கு பிறகு
உனக்கு என் அளவு அன்பு
கொடுக்க யாருமே இல்லை
என்பது தான்.
உருகி உருகி காதல் செய்து
ஊர்சுற்றி திரிந்தது ஒருவரோடு,
நீ இல்லை என்றால் நான் இல்லை என்று
வசனங்கள் பேசி காலத்தை வீணாக்கி,
கடைசிவரை வாழ்வில் சேராமல்
வீட்டில் சொல்வோரை பணத்திற்காக
மணம் செய்யும் மனிதர்களே.....
உங்கள் மாசான உள்ளத்திற்கு
காதல் எதற்கு ? பேசி காலம் கடத்த
காதல் என்ற வார்த்தை எதற்கு?