நிரஞ்சன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிரஞ்சன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Oct-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2018
பார்த்தவர்கள்:  227
புள்ளி:  10

என்னைப் பற்றி...

அனைவருக்கும் செந்தமிழ் வணக்கம்!
நான் வானூர்தி-பொறியியற் கல்வி பயிலும் கல்லூரி மாணவன். மேனிலைப்பள்ளிக் காலத்தில் எங்கள் தமிழாசிரியர் ஊட்டிய தமிழுணர்வால் மரபுச் செய்யுட்கள் எழுதத் தொடங்கினேன். இன்று நான் இயற்றிய மற்றும் இயற்றிக்கொண்டிருக்கும் பாக்களை உலகத்தமிழர்களோடு இவ்விணையதளம் வாயிலாகப் பகிர்ந்துகொள்கிறேன்

என் படைப்புகள்
நிரஞ்சன் செய்திகள்
நிரஞ்சன் - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 2:00 pm

புன்னை மரத்தடிப் பூந்தளிர்ப் பாயதன்
நன்னிழற் றண்மையிற் றங்கினேன் - மென்றுயில்
மின்னலைப் போலவென் மெல்லுட லார்க்கவு
மின்கனா கண்களில் பூம்.

#

புன்னை மரத்திலிருந்து உதிர்ந்திருக்கும் தளிர்ப்பூக்கள் பார்க்கப் பாய்போல் விளங்க,
அம்மரத்தின் நல்ல குளுமையான நிழலில் சற்றுத் தங்கி இளைப்பாறினேன். அக்கணம்,
(நிழலின் அருமையாலும், அயர்வினாலும்) என்னுடலை, மென்மையான உறக்கம்
மின்னலாய்ச் சட்டென வந்து போர்த்திக்கொண்டது.

அப்போது, எனது கண்களில் ஒளிமிகு, ஏற்றமிகு கனவொன்று, என் கண்களில் பூக்கும்.

#

அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்.

மேலும்

தங்களின் வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது 11-Jul-2019 1:18 pm
நன்றிகள் நண்பரே...!! 01-Sep-2015 4:52 pm
நன்றிகள் ஸர்பான்!! 01-Sep-2015 4:51 pm
வெண்பா மிக அருமை நண்பா... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:47 am
நிரஞ்சன் - ஞா நிறோஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2015 7:34 am

இந்நாள் அமைந்திடுநல் இன்பமும் எந்நாளும்
நன்னாளாம் என்றிடும் நல்வாழ்வும் - உன்னாலும்
எல்லாம் இயன்றிடும் என்னும் உறுதியுடன்
எல்லாமும் பெற்றிடுவீர் இன்று!

(நேரிசை வெண்பா)

இனிய காலை வணக்கம்...

ஞா.நிறோஷ்
2015.12.28

மேலும்

ஐயா, "இந்நாள், நன்னாள்" எதுகை ஆகுமா? யான் அறிந்தவரை அது எதுகை ஆகாதென்று நினைக்கிறேன் 11-Jul-2019 1:05 pm
நன்றி... 28-Dec-2015 1:38 pm
நன்றாக உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Dec-2015 1:35 pm
நிரஞ்சன் - மராதமிழவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2017 7:42 pm

கன்றாய் இருக்கையில் நன்றாய் விளையாடி
என்றும் அழியாத காவியம் தந்தாய்-பின்
நன்றாய் வளர்ந்து நலமிகு பால்கொடுத்தாய்
என்றும் மறவேன் உனை.


கற்றால் அறிவு வளரும் மழையைபூமி
பெற்றால் செழிப்பாய் இருக்கும் பெறாமலே
பெற்றத் தாயாய்பால் கொடுத்தாய் மனதில்
உற்றதாயாய் நின்றாய் நீ

கல்லுண்டு வாழும் மனிதனை மாற்றவே
நல்லசொல் கொண்டு திருத்த முயர்ச்சித்தேன்
புல்லுண்டு வாழ்ந்துநான் வாழவே பால்கொடுத்தாய்
சொல்லில்லை உன்னைபோற்ற வே!.

மேலும்

ஐயா தங்களின் வெண்பா எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. ஆனால் இறுதி வெண்பாவில் யான் கண்ட சிறுபிழை ஒன்றனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'உன்னைபோற்ற' - இதில் கண்டிப்பாகப் பகர ஒற்று இட வேண்டும். அப்படி ஒற்றிடும்போது இலக்கணம் கெடுகிறது. 08-Jul-2019 7:56 am
நிரஞ்சன் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2019 3:35 pm

சூரியன் நட்சத்திரம் கண்டதுண்டோ ?
இல்லை நட்சத்திரம் சூரியனை கண்டதுண்டோ ?

பகல் இரவை பார்த்ததுண்டோ ?
இல்லை இரவு பகலை சந்தித்ததுண்டோ ?

ஒற்றைநாணையத்தில்
இருபக்கமும் பேசியதுண்டோ ?

வெயில் மழையை அழைத்ததுண்டோ ?
இல்லை மழை வெயிலுடன் விளையாடியதுண்டோ ?

இயற்கையின் விதி போலவே நீயும் நானுமோ ?
காணாமல் இங்கு கனவில்
கரைந்து கொண்டிருக்கிறோம் .....

ஒரு பக்கம் நீயும் ,
மறுபக்கம் நானும் ....

கடிகாரம் வேகமாய் சுத்தட்டும் ...
நொடிகள் ஓடி நிமிடம் தேடட்டும் ...
தேடி பிடித்த நிமிடத்துடன் நொடிகளும் சேர்ந்து
நேரத்தை அழைக்கட்டும் .....
நேரம் பயணம் செய்து நாட்களை சேரட்டும் ....
நாட்கள் நம்மை சந்திக்க வைக்க முயற்

மேலும்

நன்று 15-Mar-2019 2:19 pm
அருமை 14-Mar-2019 5:37 pm
நிரஞ்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2019 7:55 am

மனத்தோட்டத் திற்பூத்த செங்கதிராய் என்றன்கனவிலே வாடாம லுள்ளாய் - நினதுஉளத்திலேயான் இல்லையென்ற போதிலும் நீயென்
வளச்சோலை யில்மலர்வ தேன்?நேரிசை வெண்பா

மேலும்

நிரஞ்சன் - பாலா தமிழ் கடவுள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2018 3:35 pm

யாருக்கும் தெரியாமல் நின்று
கண்டேனே உன்னை அன்று
என்னையும் அறியாத ஒன்று
மனதில் பூத்ததே இன்று
சொல்லிவிடவா இது காதல் என்று

மேலும்

மிக்க மகிழ்ச்சி மா... 28-Nov-2018 6:32 pm
ஆஹா, இன்றே சொல்லிவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் கற்பனைக் காதலி கோபித்துக் கொண்டு போய் விடுவாள்...... அருமை அருமை! 27-Nov-2018 8:13 pm
மிக்க மகிழ்ச்சி நட்பே 17-Nov-2018 11:34 am
மிக்க நன்றி நட்பே 17-Nov-2018 11:15 am
நிரஞ்சன் - Santhakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2018 7:07 pm

விஞ்ஞான உலகிலே
விலையில்லா பொருளில்லை !
நடமாடும் மனிதனுக்கு
நல்லெண்ணம் சிறிதும் இல்லை !
பணத்துமேலே மோகம் கொண்டு
பந்த பாசத்தினை பழிக்கின்றான் !
பிறர் சொல்லும் வார்த்தை கேட்டு
திசை மாறி செல்கிறான் !
சொகுசான வாழ்க்கை வாழ
தன் சொர்க்கத்தை இழக்கின்றான் !
உதவாத பணத்தை சேர்க்க
உலகெல்லாம் அலைகின்றான் !
இயற்கை அவனிடம் ...
அலைந்தது போதும் !
மனிதனே சற்று நில் !
கடலின் அலையோசை கேள்
அளவில்லா இன்பம் தரும் !
காலை எழும் சூரியனைப் பார்
உன்னை புதிதாய் உயிர்த்து விடும் !
சுற்றி திரியும் பறவையை பார்
உனக்கு பாசத்தை சொல்லி தரும் !
விலையில்லா காற்றின் மொழியை கேள்
உன் செவிக்கு இசை விருந்து

மேலும்

Thank you sir . 11-Nov-2018 4:39 pm
அற்புத சிந்தனை ; மேலும் எழுதுங்கள் 11-Nov-2018 4:07 pm
நிரஞ்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2018 7:13 am

மானுடத் தன்மை யுடன்வாழ்வா னுக்கென்றும்
மேனிலை எண்ணமே தோன்றும்

மேலும்

நிரஞ்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2018 10:37 pm

புயற்காற் றுவீசி அருள்மழை பெய்தே
பயன்பல கிட்டநலன் நல்கு

மேலும்

நிரஞ்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2018 3:15 pm

கோவானா லுஞ்சான்றா னாயினுந் தன்னாற்றல்
ஆண்டா ரளுளிலே நிற்கும்

மேலும்

நிரஞ்சன் - நிரஞ்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2018 7:46 pm

அருளளித் துத்தீ யிருளழித் தென்ற
னுருவிலா வுள்ளஞ்செம் மைசெய் வழியிற்
பொருத்து மிறைவனே நும்மாற்றற் கண்டு
பெருவியப் புற்றிருக்கி றேன்

-தமிழ் சுவை நிரஞ்சன்

மேலும்

பேராசிரியர் வ.க.கன்னியப்பன் அவர்களே முனைவர் என்று குறிப்பிட்டதைப் பொறுத்துக் கொள்ளவும்🙏 ஆம். நூல்கள் மற்றும் இணையதளம் மூலமாகப் பாக்கள் எழுதப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறேன். இயற்றத் தொடங்கிய நிலையிலே இருப்பதால், சிறந்த நயங்களைக் கையாண்டு சிறந்த நடையில் பாக்களைப் படைக்கும் திறனைப் பெற்று வளர்ப்பதற்குச் சற்று நேரம் தேவைப்படுகிறது. மற்றும், பிறமொழிச்சொற்கலப்பின்றி எழுத முயற்சிப்பதாலும் சில நேரங்களில் நயம் பொருந்திய தமிழ்ச்சொற்களைத் தேட வேண்டியதுள்ளது. தங்களின் அன்பான கருத்துக்கும் வழிகாட்டலுக்கும் என் நன்றிகள்! 04-Oct-2018 7:29 pm
ஒற்றுமை கூட்டி மகிழ்ச்சி பெருக்கும் ஒளிநாள் திருவிழா நாள் மேலேயுள்ள பாடல் தளை சரியானாலும், எதுகை மோனை இல்லை. கீழேயுள்ள வெண்பாவைக் கவனிக்கவும். ஒரு விகற்பக் குறள் வெண்பா ஒற்றுமை கூட்டியே ஓங்கும் ஒளிநாளில் சுற்றமொடு சூழல் சுகம்! – வ.க.கன்னியப்பன் நிரஞ்சன், நான் ஒரு பணிநிறைவு பெற்ற கண் மருத்துவப் பேராசிரியர். முனைவரில்லை. பயிற்சியும், தகுந்த வழிகாட்டலும் இருந்தால் பாக்கள் எழுதுவதில் தவறில்லை. முகநூலில் 'பாவலர் பயிலரங்கம்', மற்றும் 'பைந்தமிழ்ச் சோலை' என்ற தளங்களில் முறையான பயிற்சி பெறலாம். 01-Oct-2018 10:37 am
முனைவர் திரு வ.க.கன்னியப்பன் அவர்களே தங்களது கருத்தையும் மோனை பற்றிய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள்! தங்களது பா-நடை என்னைக் கவர்ந்திழுப்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனினும் தாங்கள் மேற்சுட்டிய குறிப்பொன்று எனக்குப் புரியவில்லை.சீர்களைப் பொருத்துமிடத்தே சொற்களைப் பிய்த்தெழுதுவதில் தவறில்லை என்று நம்புகிறேன். நிரஞ்சன் 30-Sep-2018 12:58 pm
அன்புள்ள நிரஞ்சன், வாழ்த்துகள். முதல் முயற்சி; வெண்பா வடிவில் முதல் கவிதை! தளைகள் சரியாக இருந்தாலும் சீர்களைப் பிய்த்துப் பிய்த்துப் போடக் கூடாது. எதுகை அமைந்தாலும், மோனை அமையவில்லை. மோனைகள் மற்ற சீர்களில் அமைத்து எழுதினாலும், ஒன்றாம், மூன்றாம் சீர்களில் அமைப்பது (பொழிப்பு மோனை) சிறப்பு. ஒரு விகற்ப இன்னிசை வெண்பா அருளளித்துத் தீயிருளும் ஆங்கழித்(து) என்றன் உருவிலா உன்னத உள்ளத்தை ஓர்ந்தே பொருத்தும் இறையே,உன் பொற்பாதங் கண்டு பெருவியப்புக் கொண்டேன் பெரிது! – வ.க.கன்னியப்பன் கி.வா.ஜ வின் 'கவி பாடலாம்' புத்தகம் வாங்கி வாசிக்கலாம். அன்புடன், வ.க.கன்னியப்பன் 25-Sep-2018 10:39 am
மேலும்...
கருத்துகள்

மேலே