Raana - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Raana |
| இடம் | : Madurai |
| பிறந்த தேதி | : 15-Jun-1988 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 02-Apr-2012 |
| பார்த்தவர்கள் | : 95 |
| புள்ளி | : 4 |
தமிழ் நரம்பு துடிக்கும் மதுரை மண்ணின் மைந்தன் நான், பொறியியல் படிப்புக்காக நெல்லை சென்று பிறகு பிழைப்பதற்காக பெங்களூர் வந்து தமிழின் வாசம் கூட நுகர முடியாத தமிழனாய் வேலை பார்த்து கொண்டுருக்கிறேன் !!
தோல்வி தான் வெற்றியின் படிகட்டுகள் என்பார்கள்..
அப்படி! எவ்வளவு உயரம் தான் செல்ல போகிறேன் என்று தெரியவில்லை,
இத்தனை படிக்கட்டுகளை வைத்துக்கொண்டு!!!
நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...
பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...
எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...
எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...
குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...
தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...
அ
இது முழுக்க முழுக்க என்னோட பயணம் …. என் பயணத்துல நடந்த நிகழ்வு பற்றிய கட்டுரைங்க….திருச்சி-ல இருந்து திருநெல்வேலி போறதுக்குள்ள நான் சந்திக்குற மனுசங்க எப்படிலாம் இருக்காங்க இந்த பயணத்துல என் மனசு என்ன-லா அசைப்போட்டு எனக்கு புதுசு புதுசா என்ன கத்து தருது-னு பற்றிய கட்டுரை….
காலை-ல சேவல் சரியா கூவுதோ இல்லையோ இந்த அலாரம் இம்ச கரெக்டா கூவிடும்…. 4 மணிக்கே சரியா கூவிடுச்சு… அம்மா-வும் உடனே சுப்ரபாதம் பாட ஆரம்பிச்சுட்டாங்க ரம்யா எழுந்திரு….. மணி 4.05 மணி 4.10 இப்படியே சொல்லி சொல்லி எழுப்பிடுவாங்க….அப்பதான் நா ஒரு 4.30 மணிக்காவது எழுந்திருப்பேனு….ஒரு வழியா 4.30 மணிக்கு முழிச்சிட்டேன்…உடனே எழுந்திர
முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையடா!
*** முயற்சிகள் நிறைந்த வாழ்க்கையடா!
தடுப்புகள் தாண்டி வந்துவிட்டால்
*** தயாராய் இருக்குது கோட்டையடா!
ஆழங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையடா!
காலங்கள் வரும்வரை காத்திருந்தால்
*** கனிகள் உதிர்க்கும் தோட்டமடா!
கர்மங்கள் தொலையும் வாழ்க்கையடா!
*** கஷ்டங்கள் சூழும் வாழ்க்கையடா!
தர்மங்கள் எதுவெனத் தெரிந்துகொண்டால்
*** தாகம் தணிக்கும் தீர்த்தமடா!
வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** வலிகள் மிகுந்த வாழ்க்கையடா!
திருத்தங்கள் உள்ளே செய்துகொண்டால்
*** திருப்பங்கள் காட்டும் வாழ்க்கையடா!
குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
***
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய