ரமேஷ் சோமசுந்தரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரமேஷ் சோமசுந்தரம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Mar-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நான் யார் என்று அறிய முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு மடையன்...

என் படைப்புகள்
ரமேஷ் சோமசுந்தரம் செய்திகள்
ரமேஷ் சோமசுந்தரம் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2014 7:43 am

மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!


நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!


மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!


வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!


பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!


எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!

மேலும்

மந்திர மொழயில் ஓர் வசந்த அழைப்பு .. சுந்தரக் கவிதை ! 21-Aug-2015 10:27 am
சூப்பர் ஜி 03-Jul-2015 11:47 pm
பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :) 04-Dec-2014 10:03 am
மிக்க நன்றி தோழி 15-Nov-2014 9:27 pm
ரமேஷ் சோமசுந்தரம் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2014 10:22 pm

முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையடா!
*** முயற்சிகள் நிறைந்த வாழ்க்கையடா!
தடுப்புகள் தாண்டி வந்துவிட்டால்
*** தயாராய் இருக்குது கோட்டையடா!

ஆழங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையடா!
காலங்கள் வரும்வரை காத்திருந்தால்
*** கனிகள் உதிர்க்கும் தோட்டமடா!

கர்மங்கள் தொலையும் வாழ்க்கையடா!
*** கஷ்டங்கள் சூழும் வாழ்க்கையடா!
தர்மங்கள் எதுவெனத் தெரிந்துகொண்டால்
*** தாகம் தணிக்கும் தீர்த்தமடா!

வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** வலிகள் மிகுந்த வாழ்க்கையடா!
திருத்தங்கள் உள்ளே செய்துகொண்டால்
*** திருப்பங்கள் காட்டும் வாழ்க்கையடா!

குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
***

மேலும்

நல்வரவு! வாழ்த்திற்கு நன்றி! 21-Dec-2014 11:49 am
நல்வரவு! வாழ்த்திற்கு நன்றி! 21-Dec-2014 11:49 am
அருமை அருமை நட்பே 16-Dec-2014 11:35 pm
மிக அருமை... 03-Dec-2014 7:41 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
ரமேஷ் சோமசுந்தரம் - சகா சலீம் கான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 8:28 pm

காயம் பட
மனதுக்கு,
கத்தி தொட
தேவையில்லை...

காதல் தொட்ட
மனதின்,
காயம் இன்னும்
ஆறவில்லை...

அழியா
சின்னமாய்,
இதய கல்வெட்டில்
முதல் காதல்...

மேலும்

அருமை 16-Dec-2014 11:52 pm
அருமை.. 03-Dec-2014 8:58 am
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2014 9:29 pm
நன்றி , சலீம் 01-Dec-2014 11:39 am
ரமேஷ் சோமசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 10:29 pm

முன்குறிப்பு: என் மனைவி கொஞ்சம் முன்கோபி... அவளுக்காக எழுதிய அன்பான அட்வைஸ் இது!


ஆத்திரப்படாதே!
அன்பே ஆத்திரப்படாதே!

அன்றாடம் ஆக்ஸிடெண்டுகள்
ஒன்றிறென்டு ஏற்படக்கூடும்
ஆத்திரப்படாதே!

அன்பாய் பெற்றெடுத்த
ஐந்து வயது அல்வா துண்டு
அப்போஇப்போ சிறுகுறும்பு
செஞ்சுத்தான் விளையாடும்
ஆத்திரப்படாதே!


அறிவுஜீவி அப்துல் கலாம்கூட
ஐந்து வயதில் இப்படித்தான்
அடம்பிடித்து அழுதிருப்பார்
ஆத்திரப்படாதே!


ஆபீஸுக்கு போகும்
அவசரத்தில் உன் கணவன்
அங்கும்இங்கும் எதையேனும்
அழுக்குபடுத்தி செல்லக்கூடும்
ஆத்திரப்படாதே!

அன்னிய மக்கள்
அவர்தம் அறியாமையால்
ஏதோ ஒன்றிரண்டு

மேலும்

மிக்க நன்றி catherine ... 03-Dec-2014 7:25 pm
புரம் = புறம் 03-Dec-2014 12:14 pm
உத்தமமான வாக்கு :). மனைவிக்கு இது ரொம்ப பிடித்துவிட்டது... ஆதலால் பிரச்சன்னை இல்லை... :). 03-Dec-2014 7:49 am
குடும்பத்தில் புகுந்து கருத்துப் போட்டு குட்டையை குழப்ப வேண்டாமென்று நினைக்கிறேன்... 03-Dec-2014 3:29 am
ரமேஷ் சோமசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 9:42 am

என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய்... நீ.

மேலும்

நன்றி அஜித்... இப்போதுதான் எழுதத் துவங்கி இருக்கிறேன்... கருத்துக்கு நன்றி... 02-Dec-2014 8:19 pm
நன்ற Jinna . 02-Dec-2014 8:14 pm
மனைவிக்கு மரியாதை.. அதிலும் தனி கவிதை... 02-Dec-2014 10:51 am
ஹ்ம்ம் ... கட்டமைப்பினில் கூடுதல் கவனம் தேவை !! 02-Dec-2014 10:40 am
ரமேஷ் சோமசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 9:37 am

நிம்மதியேது...
நித்தம் உன் ஞாபகம் நெஞ்சை உலுக்கும் போது!

மேலும்

அருமை! 03-Dec-2014 7:33 am
நன்றி நம்பரே... 03-Dec-2014 6:38 am
சரிதான் தோழரே.. 03-Dec-2014 4:29 am
ரமேஷ் சோமசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2014 6:14 am

விடிந்து விடிவெள்ளி வரும்முன் வந்தது... உன் நினைவு!

மேலும்

நன்றி பழனி குமார்... 02-Dec-2014 8:58 am
நன்று 02-Dec-2014 7:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே