lathaponnarivu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  lathaponnarivu
இடம்:  dharapuram
பிறந்த தேதி :  24-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2014
பார்த்தவர்கள்:  262
புள்ளி:  61

என்னைப் பற்றி...

காதலை சுவாசிப்பவன் ,கவிதையை நேசிப்பவன்....

என் படைப்புகள்
lathaponnarivu செய்திகள்
lathaponnarivu - எண்ணம் (public)
19-May-2016 6:17 pm




நாளிதழில் படித்தது



இளவரசன் சுகுமார் ( இடது) | பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரித கதியில் இயங்கிய அரசுப் பேருந்து (வலது)

மேலும்

lathaponnarivu - எண்ணம் (public)
18-May-2016 6:36 pm

  

நாளிதழில் படித்தது

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சசிகுமார், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்கள். சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் நலிவடைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால், தற்போது வெளிவந்துள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், பணம் இல்லாத சூழ்நிலையில் நல்ல கல்லூரியில் சேர முடியாத மாணவ, மாணவிகளுக்கு பணஉதவி செய்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். விஷால் தனது அம்மா பெயரில் தொடங்கியுள்ள தேவி அறக்கட்டளை மூலமாக இந்த உதவியை செய்யவுள்ளார். யாராவது தங்கள் பகுதிகளில் இதுபோன்று மேல்படிப்புக்கு கஷ்டப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களை விஷாலுக்கு தெரியப்படுத்தினால், அவர் அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுவார். மேலும், விவரங்கள் அறிந்துகொள்ள 8754009846 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம். விஷால் தற்போது மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற 16 மாணவ, மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அந்த மாணவர்கள் விவரம்: பத்மபிரியா 1137/1200 புவனேஸ்வரி 1128/1200 சக்தி 1082/1200 கோபிநாத் 1068/1200 பிரகதி 1044/1200 கங்காதேவி 1039/1200 ரியாஸ் அகமது 1027/1200 மனிஷா 1016/1200 மனோ 1010/1200 ஏ.பிரியா 966/1200 எஸ்.பிரியா 923/1200 உமா மகேஷ் 994/1200 பூவிழி கண்ணை 956/1200 மாரிமுத்து 971/1200 நவீன்குமார் 979/1200 அமரா 951/1200.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vishal-announces-education-aid-poor-students-253977.html  

மேலும்

lathaponnarivu - எண்ணம் (public)
09-May-2016 7:28 pm

என்று  விடியும் ??????

சில நிமிட ஆசைக்கு  பெண்களை பலி கொடுக்கும் கொடூர காமுகன்களுக்கு தண்டனை தர கடவுளும் ஊமையா இருபது  ஏனோ 



அவளுக்கொரு கனவு இருந்தது. நல்ல தரமான வாசற்கதவுகள் உடைய ஒரு வீட்டை கட்ட வேண்டும். அதில் தன் அம்மாவை மகாராணி போல் வாழ வைக்க வேண்டும் என்று. அவளுக்கொரு விருப்பம் இருந்தது, இந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் களையப் பட வேண்டும். எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று. அவளுக்கொரு இலட்சியம் இருந்தது, விரைவில் இந்த வறுமையிலிருந்து விடுப்பட வேண்டும் என்று. ஆனால், அந்த வியாழக்கிழமை எல்லாம் சிதைந்தது. இல்லை இல்லை  மிக மோசமாக சிதைக்கப்பட்டது. வாழ்க்கை என்றுமே அவளுக்கு மகிழ்வானதாக இருந்ததில்லை, இப்போது அவளுக்கு மரணமும் துயர்மிகுந்த ஒன்றாகவே அமைந்துவிட்டது.

அவள் வாழ்வை நேசித்தாள்: அவள் வறுமையிலும் இந்த வாழ்வை மிக நேசித்தாள். அவள் வறுமையை வெளிக்காட்டி யாரிடமும் பாரிதாபத்தை கோரியதில்லை. அவளது வயதான வகுப்பு தோழி ரீட்டா, “விடுதிக்கும், கல்லூரிக்கும் சில மைல்கள் தூரம். ஆனால், அவள் என்றுமே பேருந்தில் பயணித்தது இல்லை. காரணம் பேருந்து கட்டணம். தினமும் பல மைல் தூரம் நடந்தே கல்லூரிக்கு வருவாள். அவள் சாப்பிட்டும் நாங்கள் பெரும்பாலும் பார்த்ததில்லை. சாப்பிட்டால் தானே பார்ப்பதற்கு. நாங்கள் உணவு கொடுத்தாலும், அதை வாங்க அவள் தன்மானம் இடமளிக்கவில்லை.” 

அவள் பெரும்பாலும் தனிமையில் தான் இருந்திருக்கிறாள். ஒன்று ஏதாவது யோசனையில் இருப்பாள் அல்லது புத்தகத்தில் புதைந்து இருப்பாள். அவளின் ஒரே தோழி ரீட்டா மட்டுமே. 

ரீட்டா சொல்கிறார், “கல்லூரி முடிந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் அவள் என்றுமே பங்கெடுத்ததில்லை. வீட்டில் தனியாக அம்மா இருப்பார் என்ற காரணத்தினால், அவள் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடுவாள்.”

அவளின் இன்னொரு கனவாக இருந்தது வீட்டிற்கான நிலை கதவு. பல ஆண்டுகள் அவள் கதவில்லாத வீட்டில் தான் வசித்து இருக்கிறாள். ரீட்டா ஒரு முறை கதவிற்கு பணம் தருவதாக சொன்ன போதும் அவள் வாங்க மறுத்திருக்கிறாள்.

ஆனால், இவ்வளவு அழுத்தங்கள் தாண்டியும் அவள் வாழ்வை மிக நேசித்தாள். வாழ்வில் முன்னேற வேண்டும். இந்த வறுமையை வென்றெடுக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அவளது அம்மா ராஜேஸ்வரி சொல்கிறார், “தன் போல் வறுமையில் இருக்கும் பெண்களுக்காக போராட வேண்டும் என்று விரும்பினாள். அதனால் தான் அவள் சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். ஆனால், பொருளாதார நெருக்கடியால் அவளால் கல்லூரிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை” 

“எங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் தான் கோயில் இருக்கிறது. சாமி நடந்து வந்திருந்தால் கூட எங்களை காத்து இருக்கலாம்... ஏனோ எங்களை காக்க மட்டும் சாமி எப்போதும் வர மாட்டேன் என்கிறது...” என்று வெடித்து அழுகிறாள் ராஜேஸ்வரி.

அவளும், அவளது அம்மா ராஜேஸ்வரியும்தான் அந்த சிறிய வீட்டில் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களது தனிமையை பயன்படுத்தி, பல முறை அவளை பயன்படுத்தி கொள்ள சில ஆண்கள் முயற்சித்து இருக்கிறார்கள். அவளது பாதுக்காப்பிற்காகவே ராஜேஸ்வரி அவளுக்கு பென் காமிரா வாங்கி கொடுத்து இருக்கிறாள்.

அவள் நிர்பயா இல்லை:நிர்பயா சம்பவத்தில் அனைத்து அறங்களையும் காத்த தேசிய ஊடகங்கள்.  இந்த கேரள பெண் விஷயததில் எதையும் கண்டுகொள்ளவில்லை. நிர்பயா சம்பவத்தில் இந்தியாவே கொதித்து எழுந்தது. ஏன் தமிழ்நாட்டில் கூட அனைத்து மாவட்டங்களிலும் மெளன ஊர்வலங்கள் நடந்தது. இந்தியாவே நியாயம் கேட்டது. ஆனால், இவள் மரணத்திற்காக அப்படி யாரும் நீதி கோரவில்லை. கேரள எல்லைகளை தாண்டி எந்த போராட்டமும் நடந்துவிடவில்லை.எது நம்மை தடுக்கிறது. நிச்சயம் நிர்பயாவிற்காக நடந்த உன்னத போராட்டங்களை நான் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், அது போல் ஏன் யாரும் இவளுக்காக போராட வரவில்லை...?   

மேலும்

lathaponnarivu - எண்ணம் (public)
09-May-2016 7:16 pm


படித்ததில் பிடித்தது 



  மனைவிக்கு தண்ணீர் மறுப்பு: தனியாக கிணறு வெட்டி ஊருக்கே வழங்கும் தனி ஒருவன்!  


மும்பை: தாழ்த்தப்பட்டவர் என்பதால் மனைவியை கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், அவரது கணவர் தனியாக ஒரு கிணற்றை வெட்டி, அதிலிருந்த வந்த தண்ணீரை ஊரார் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி ஊரில் இருந்த உயர் வகுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது கிணற்றின் உரிமையாளர், தண்ணீர் எடுக்க கூடாது என கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி அழுவதை பார்த்து விரக்தி அடைந்த பாபுராவ், தனது வீட்டிற்கு அருகில் தனியாக கிணறு வெட்ட ஆரம்பித்திருக்கிறார்.

பாபுராவ் வெட்டிய கிணற்றுக்கு அருகில் ஏற்கனவே 3 கிணறுகளும், ஒரு ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்திருக்கிறது. இதனால், பாபுராவை அவரது மனைவி உள்பட உறவினர்கள் அனைவருமே விமர்சனம் செய்ததோடு, யாரும் கிணறு வெட்ட உதவியும் செய்யவில்லை.இருப்பினும், மனம் தளராத பாபுராவ், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் 4 மணி நேரமும், வேலை முடிந்து வந்த பின் 2 மணி நேரமும் கிணறு வெட்டியிருக்கிறார். விடா முயற்சியாக பாபுராவ் வெட்டிய கிணற்றில் 40 நாளில் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும் அதிகமான தண்ணீர் ஊற்றெடுத்திருக்கிறது.

இப்போது அந்த கிணற்றில் இருந்து தாழ்த்தப்பட்டவர் மட்டுமின்றி, உயர் சாதியினரும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து பாபுராவ் கூறுகையில், ''எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால், எப்படியாவது தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடவுளை மட்டுமே நினைத்து வேண்டிவிட்டு, பக்கத்து ஊருக்கு சென்று கிணறு வெட்டும் பொருட்களை வாங்கி வந்தேன்.

எனது வேண்டுதலின் பயனாக கடவுள் இந்த இடத்தில் தண்ணீர் வர வைத்து இருக்கிறார். இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, உயர் சாதியினரும், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்தவர்களும் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்'' என்றார்.படித்ததில் பிடித்தது  இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, எந்தவிதமான உதவியும் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

தனி ஒருவனாக நின்று 40 நாட்களாக கடுமையான உழைப்பின் மூலம் கிணறு வெட்டி, இன்று ஊருக்கு தண்ணீர் வழங்கும் பாபுராவ் தஜ்னேவை பார்த்து ஊரார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

மேலும்

lathaponnarivu - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2015 2:50 pm

பாஸ்போர்ட் அலுவலகங்களில்
பெருங்கூட்டம்
அணுஉலையை 
இறக்குமதி செய்கிறோம்
படித்தவர்களை
ஏற்றுமதி செய்கிறோம்

மேலும்

lathaponnarivu - லக்ஷ்மணன் 9952241154 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2015 5:24 pm

"என்னை
பிரிந்து
சென்று
இன்னொருவனுடன்
வாழும்
உன்
காதல்
புனிதமானது
என்றால்..!
உன்
பிரிவின்
வலிகளை
அனுபவித்து
என்
வாழ்க்கையை
இழந்து
பிறகு
யோசித்து
உன்
நினைவுகளை
இழக்க
நினைக்கும்
என்
காதலும்
புனிதமானது
தானடி..!
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)

மேலும்

lathaponnarivu - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2015 11:33 am

பெய்யாத மழையில்
நனையும் குடைகள் ..

-காதல் விற்பனன்

மேலும்

நல்ல கற்பனை. பெய்யும் மழை என்ற நம்பியதாலோ.! 01-Sep-2015 12:32 pm
அருமையான துளிப்பா நட்பே!! 01-Sep-2015 11:48 am
lathaponnarivu - திருமூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2015 8:30 pm

ஏழையாகப் பிறக்கலாம்
கோழையாக இருக்காதே..!
-திருமூர்த்தி

மேலும்

நன்றி.... 02-Sep-2015 6:29 pm
நன்றி.... 02-Sep-2015 6:29 pm
நன்றி..... 02-Sep-2015 6:29 pm
சூபர் திருமூர்த்தி 02-Sep-2015 12:16 pm
lathaponnarivu - உதயகுமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 8:52 pm

நேற்று மருதமலையிலே பார்த்த காட்சி இது. கோயிலுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்ததும் இந்த ஆடு அங்கே வந்திருக்கிறது.
அவர்களும் அந்த ஆட்டை "சூ சூ... போ அந்தாண்டே..." எனத் துரத்தாமல்.. தங்களை விட்டுத் தள்ளி ஒரு ஓரமாய் தட்டிலே சாதம் வைத்து.... போ... என விரட்டாமல்..அந்த ஆட்டுக்கும் தங்களோடு சேர்த்து ஒரு தட்டு உணவு வைத்துப் பரிமாறியிருக்கிறார்கள்..
இவர்களின் அன்பும், அந்த ஆடு சாப்பிடும் அழகும், மனசுக்கு நெகிழ்வாக இருந்தது பார்க்க. அனுமதியோடு இந்தப் படத்தை எடுத்ததும்....
"புளிசாதம்தான் ரொம்பப் பிடிச் (...)

மேலும்

ஆமாம் தோழரே குறைந்த அளவில் மட்டும் ... வருகைக்கு நன்றிகள் ........ 09-Jul-2015 4:55 pm
நல்ல மனிதர்கள் இன்னும் நம் மண்ணில் வாழ்கிறார்கள் ....... 09-Jul-2015 12:07 pm
ஆமாம் ஐயா ஏனெனில் இங்க மனிதம் சிலர் இடத்தில் மட்டுமே உள்ளது அல்லவா ? வருகைக்கு நன்றி ஐயா 08-Jul-2015 9:52 pm
மனிதம் போற்ற பட வேண்டும் பாராட்ட பட வேண்டும் 08-Jul-2015 9:44 pm
lathaponnarivu - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2015 12:35 pm

உலக தந்தையர் தினமான இன்று தந்தையாய் இருப்பவர்களுக்கும், நாளை தந்தையாய் ஆகா போகிறவர்களுக்கும் வாழ்த்து கூறிவிட்டு மனிதயின தந்தையர்களை போலவே தனது குழந்தைகளுக்காக ஒப்பற்ற தியாகங்களை புரியும் பறவையின தந்தையை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

அது எம்பரர் பென்குயின் எனும் பறவை ஆகும்.

மார்ச் மாதம் அண்டார்டிக்கா கண்டத்தின் கோடையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எம்பரர் பென்குயின்களை அவைகளின் இனப்பெருக்க தளங்களுக்கும் வரவேற்கிறது. உருகிய பனி துவாரங்களாக உள்ள கடற்க்கரை விளிம்புகளில் இருந்து 70 மைல்களுக்க (...)

மேலும்

மிக்க நன்றி.... 05-Jul-2015 3:59 pm
இதுவரை அறிந்திராத செய்தி ..நல்ல செய்தியும் கூட.... 04-Jul-2015 3:20 pm
மிக்க நன்றி... 27-Jun-2015 9:00 am
நல்ல பதிவு. நன்றி! 26-Jun-2015 7:41 pm
lathaponnarivu - lathaponnarivu அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2015 12:33 pm

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த குமார் - சாந்தி தம்பதியின் மகன் லோகநாதன், 17. இவர், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்; பொதுத்தேர்வில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதை தொடர்ந்து, கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக்., பள்ளியில், பிளஸ் 2 இலவசமாக முடித்தார்.
பிளஸ் 2 தேர்வில், 1,080 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், இன்ஜினியரிங், கட் - ஆப், மதிப்பெண்ணாக, 192 பெற்றுள்ளார். அதன் மூலம்,மேற்படிப்பு படிக்க மாணவர் விரும்புகிறார (...)

மேலும்

நான் நாளிதழில் பாடித்ததை தான் பகிர்ந்தேன் ,தவறான தகவல் என தெரியவில்லை ..... மன்னிக்கவும் 02-Jul-2015 7:06 pm
தவறான அலைபேசி எண் .. தவறான தகவல்கூட .. இந்த பதிவினை நீக்கவும் 29-Jun-2015 12:57 pm
பகிர்வுக்கு நன்றிகள் ! 29-Jun-2015 12:50 pm
lathaponnarivu - lathaponnarivu அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2014 1:49 pm

நாளிதழில் நான் அறிந்தது


வெயிலடிக்கும் மரத்தடியில், கோவில் நுழைவாசலில், மக்கள் நெரிசல் மிகுந்த தெருக்களில் என, சென்னையின் பெரும்பான்மையான இடங்களில், பிச்சைக்காரர்களை பார்க்க முடியும். சோகம் வழியும் அவர்களின் குரல்களுக்கு என்றாவது நாம் காது கொடுத்திருப்போமா? அவர்களிடம் நிறைய கண்ணீர் உண்டு. நம்மிடம் தான் காதுகளில்லை. ஆனால், சிறியவர்கள் என, நாம் நினைக்கும் பள்ளி மாணவர்கள், அவர்களுக்கு பெருவாழ்வு தந்திருக்கின்றனர். பெரம்பூர், 'கல்கி ரங (...)

மேலும்

நன்றி.... 13-Oct-2014 7:14 pm
நன்றி... 13-Oct-2014 7:14 pm
நன்றி... 13-Oct-2014 7:13 pm
நன்றி.... 13-Oct-2014 7:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே