மனோ பாரதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மனோ பாரதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 03-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 446 |
புள்ளி | : 44 |
கல்லூரியில் பதில்
சொல்ல முடியாமல்
முழித்த போது தான்
கசந்தது
பள்ளியில் அமைதியாய்
இருந்ததற்கு நான் பெற்ற
பாரட்டும் பைவ்ஸ்டாட் சாக்லெட்டும்
கல்லூரியில் பதில்
சொல்ல முடியாமல்
முழித்த போது தான்
கசந்தது
பள்ளியில் அமைதியாய்
இருந்ததற்கு நான் பெற்ற
பாரட்டும் பைவ்ஸ்டாட் சாக்லெட்டும்
அகம் முழுதும்
அழுக்கை சுமந்துகொண்டு
வெள்ளாடை புறம்கொண்டு
திரியும் வெளிவேடகாரர்களே!
வஞ்சகத்தின் விந்தில்
வெளிவந்த வணிகர்களே!
டிசம்பர் இரண்டு
ஊர் இருண்டதும்
ஏரியில் நீர் ஏறி
எங்கள் உயிர் மாண்டதும்
எறும்பாய் சேர்த்த பொருட்கள்
துரும்பாய் தண்ணீரில்
கலந்தது அறியுமோ
பசியால் தாய்பால்
தீர்ந்ததும்
பாக்கெட் பாலின் விலை
உயர்ந்ததும்
கதறிய குழந்தை
பதறிய தாய்
தற்கொலை செய்ததும்
உமக்கு புரியுமோ
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கடலாய் தெரிகிறது பூமி
தெருவெங்கும் தண்ணீர் தண்ணீர்
ஆனாலும் தாகத்தோடு மக்கள்
இந்து கோவிலில் கிறுஸ்துவர்கள்
தேவாலயங்களில் முஸ்லிம்கள்
மசூதிகளில் இந்துகள்
ஒரு தாசியின் கவிதை-வித்யா
சிறுவயதில் பிடித்து
உள்ளங்கைக்குள் மூடிக்கொண்டு
அதிசயித்து அழகுப்பார்த்த மின்மினிக்கு
நிலவு விளக்கணைக்கும் எனதறையில்
வேலை இல்லை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது..............
வண்ணங்கள் வழி மொழி பேசும்
சிறு வண்ணத்துப்பூச்சியிடம்
எடுத்துக்கொள்ள எனக்கேற்ற நிறம்
கருமை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது............
பெரிதாய் எதிர்பார்ப்பில்லாத ஒவ்வொரு நாளின்
முடிவிலும் சிறு ஏமாற்றமென்பது
வியர்வை உறிஞ்சும் மின்விசிறியின்
கூர்நாக்கின் வேகம் குறைந்து புழுக்கம்
மிகுந்ததே........என்பதை
அதனிடம் எப்படி சொல்வது.........
தனிமையில் கடக்கும்
பாலைவன வீ
கணவன் இறந்ததற்காய்
பரிபோன பூமாலை
விழுந்தது
அவள் மரணத்தில்
சாவு மாலையாக.
பிஞ்சுகள் இதழ்படாத தாய்முலைகள்
பசுமையிழந்த பட்டுபோன மரங்கள்
முறைப் பெண்ணை அடுத்த யுகமாவது -மணம்
முடித்து கொள்கிறேன் என உறவுகள்
இறந்த பிறகாவது நம்
இதயங்கள் இணையட்டும் என காதலர்கள்
நடந்ததை நினைத்ததால்
நேசிக்க முடியா நேரங்கள்
உயிர் எப்போது பிரியுமோ?
உறங்காத விழிகள்
எவன் விழிகள் வேர்த்தால் -நமக்கு
என்ன என கவலைபடா இராணுவர்கள்
வகுப்பறை செல்லும் வயதில்
கருவறையில் குழந்தை சுமந்தபடி
தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறு என்ன செய்தோம்
தவிப்போடும் ஆத்திரதோடும் அப்பாவிகள்
இத்தனை'கள்' விளங்காத
இலங்கை இராவணனுக்கு
எப்போது புரியும்
இந்த ஈழத்தமிழர்களின் உணர்வு?
எங்கே அவள்
எரிகிற வெளிச்சத்தில்
எழுந்து மறைவதெங்கே?
அயிரமாயிரம் நட்சத்திரங்கள்
அவளுக்காக இருந்தும் -அந்த
கறுப்பு முகிலோடு
கள்ளகாதல் புரிவதேன்?
உன் கையிலிருக்கும் மெழுகுத்திரியின்
வெளிச்சத்தை விட
ஒளியாய் இருக்கிறது
உன் முகம்
கணவன் இறந்ததற்காய்
பரிபோன பூமாலை
விழுந்தது
அவள் மரணத்தில்
சாவு மாலையாக.
பிஞ்சுகள் இதழ்படாத தாய்முலைகள்
பசுமையிழந்த பட்டுபோன மரங்கள்
முறைப் பெண்ணை அடுத்த யுகமாவது -மணம்
முடித்து கொள்கிறேன் என உறவுகள்
இறந்த பிறகாவது நம்
இதயங்கள் இணையட்டும் என காதலர்கள்
நடந்ததை நினைத்ததால்
நேசிக்க முடியா நேரங்கள்
உயிர் எப்போது பிரியுமோ?
உறங்காத விழிகள்
எவன் விழிகள் வேர்த்தால் -நமக்கு
என்ன என கவலைபடா இராணுவர்கள்
வகுப்பறை செல்லும் வயதில்
கருவறையில் குழந்தை சுமந்தபடி
தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறு என்ன செய்தோம்
தவிப்போடும் ஆத்திரதோடும் அப்பாவிகள்
இத்தனை'கள்' விளங்காத
இலங்கை இராவணனுக்கு
எப்போது புரியும்
இந்த ஈழத்தமிழர்களின் உணர்வு?
ஆண்டுக்கொரு முறை நடக்கும்
எங்கள் ஊர் திருவிழாவில்
மூன்று வரிசையில்
அன்னதானம் வழங்கும் நிகழ்வு
அப்போது தான் நடைபெறும்
முதல் வரிசையில்
மேல் சாதிக்காரர்கள்
'டிபன் பாக்ஸ்களோடு'
இரண்டாம் வரிசையில்
நடுத்தர வர்க்கத்தினர்
தூக்குச் சட்டிகளோடு
முன்றாவது வரிசையில்
தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்
கூஜாவோடும் சொம்புகளோடும்
ஆனாலும் கடைசிவரை
யாருக்கும் தெரியாமல் போனது
அன்னத்தை எந்த சாதிக்காரன்
சமைத்தான் என்று.
முத்தத்தால் என்னை
பித்தன் ஆக்கியவளே!
முத்துபோல் நீயிருக்க -உனக்கு
ரத்தமாய் நானிருப்பேன்
காலடிச் சுவடுகள் எல்லாம்
கவிதைகள் சொல்லும் -அது
கற்பனையை மிஞ்சும்
கன்னக்குழி அழகில் என்னை
கவிஞன் ஆக்கியவளே!
காந்தப் பார்வையால் என்னை
கடிகாரம் போல் சுழலவைத்தாய்
உறங்கிக் கொண்டிருந்த
உயிரை உசுப்பிவிட்டாய் -என்
உணர்வை விழிக்க செய்தாய்
கருங்கூந்தலில் என்னை
கவர்ந்து ஈர்த்தவளே! -உன்
இதய தோட்டத்தில் ஓர்
இடம் கொடு....
காலமெல்லாம் நானிருப்பேன் -உன்
காவலனாக ..........
நண்பர்கள் (12)

கவித்தாசபாபதி
ஊட்டி

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

kavik kadhalan
thiruppur
