mohana - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mohana |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 5 |
முதல் முறை உன்னிடம்
என் காதல் சொல்ல
கவிதை ஒன்றை சிந்தித்தேன் !!!
எழுத்து வடிவிலும் அல்ல ;
வார்த்தை வடிவிலும் அல்ல ;
வாசிப்பு வடிவிலும் அல்ல;
ஓயாமல் உளறிக்கொண்டிருக்கும் நான்
உன்னிடம் மட்டும் நாணி
மௌனம் பேசும் அந்த ஒரு கணம்
நான் உனக்காக எடுத்து வந்த
"மௌனக் கவிதை"
நம்பி இருக்கும் நண்பன்
உடையாமல் இருக்க
மண் மேல் துளித்துளியாய்
உடைகிறாய் நீ!!!
பிறரின் குறை தீர்க்க
பிறந்ததால் தான் உனக்கு
ஆயுட்காலம் என்பது இல்லையோ!!!
கண்ணீர் அரும்பி வானம்
பார்க்கும் போது
மெல்ல முகம் தழுவி
முத்தமிடும் நண்பன் நீ!!!!
அவ்வப்போது வாட்டி வதைத்தாலும்
குளிர்ச்சிவூட்டுவாய் நீ!!!!
வாழ்வின் இன்றியமையாத தேவை நீ!!!!
நம் உடலுக்கு உயிர்த்துளி குருதி
நம் மண்ணின் உயிர்த்துளி மழைநீர்!!!
மார்கழி மாத பனிப் போல்
என் மேல் தினம் தினம்
காதல் மழை பொழிகிறாய் நீ...
ஆனால் என் நினைவில் இருந்து
உன் நினைவை அகற்ற
தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறேன் நான்..
என் பார்வையில் இருந்து
உன்னை விலக்கினாலும்
கனவில் வந்து காதல் செய்கிறாய்...
பெற்று எடுத்து பேர் வைத்து
வளர்த்தவர்களின் அன்பை தாண்டி
உன்னிடம் உண்மையை உரைத்து கூற
என்னிடம் வலிமை இல்லை..
இதழ் திறந்து சொல்லாத என் காதலை
நான் எழுதும் எழுத்துக்களை நனைக்கும்
என் கண்ணீர் துளிகள் சொல்லும்...
என்னாகும் என் காதல்
உன்னிடம் சொல்லாமலேயே
என்னோடு சேர்ந்து மண்ணாகி விடுமோ...
மார்கழி மாத பனிப் போல்
என் மேல் தினம் தினம்
காதல் மழை பொழிகிறாய் நீ...
ஆனால் என் நினைவில் இருந்து
உன் நினைவை அகற்ற
தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறேன் நான்..
என் பார்வையில் இருந்து
உன்னை விலக்கினாலும்
கனவில் வந்து காதல் செய்கிறாய்...
பெற்று எடுத்து பேர் வைத்து
வளர்த்தவர்களின் அன்பை தாண்டி
உன்னிடம் உண்மையை உரைத்து கூற
என்னிடம் வலிமை இல்லை..
இதழ் திறந்து சொல்லாத என் காதலை
நான் எழுதும் எழுத்துக்களை நனைக்கும்
என் கண்ணீர் துளிகள் சொல்லும்...
என்னாகும் என் காதல்
உன்னிடம் சொல்லாமலேயே
என்னோடு சேர்ந்து மண்ணாகி விடுமோ...
ஒளிவு மறைவு தனில்
உயிர் வாழும் உன்னத
காதல் தனை உலகில் நான்
கண்டதில்லை.!
என்னவனே நீ
மட்டும்
உண்மைகளை
மறைத்து ஊமையாய்
நடிப்பதென்ன .?
உயிரிலும் மேலாக
உன்னை நான் நினைக்கையில்
உண்மைகளை என்னிடம்
மறைப்பதென்ன ?
கண்விழிக்கும் நேரம்தொட்டு
கண்ணுறங்கும் நேரம் வரை
காதல் மழை பொழிகின்றாய்
பாசம் என்னும் பெயரில்
வேஷம் காட்டி நடிகின்றாய்
என்ன செய்தேன் நானுனக்கு
ஏன் இந்த மோசங்கள் .?
வலிகள் தாங்கிட முடியவில்லை
வார்த்தையில் வடிக்க தெரியவில்லை
உண்மையாய் நீ என்னை
நேசிப்பதென்றால்
உள்ளம் திறந்து என்னை போல்
உளறிவிடு உண்மைகளை ...!
என் விழியின் தேடல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
உன்னை காணும் வரை...
எனக்கு சொந்தமான இதயம்
என்னைப் பற்றி சிந்திக்காமல்
உன்னைப் பற்றி சிந்திக்கிறது...
உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து
நான் நீயாகவே மாறிக் கொண்டு இருக்கிறேன்...
மாற்றங்களையே விரும்பாத நான்
இத்தனை மாற்றங்களை விரும்புகிறேனே
''உன்னை விரும்பும்'' ஒற்றை காரணத்தால் தானா??
என் விழியின் தேடல்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
உன்னை காணும் வரை...
எனக்கு சொந்தமான இதயம்
என்னைப் பற்றி சிந்திக்காமல்
உன்னைப் பற்றி சிந்திக்கிறது...
உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து பார்த்து
நான் நீயாகவே மாறிக் கொண்டு இருக்கிறேன்...
மாற்றங்களையே விரும்பாத நான்
இத்தனை மாற்றங்களை விரும்புகிறேனே
''உன்னை விரும்பும்'' ஒற்றை காரணத்தால் தானா??
இன்று என் விடியல் உன்னைக் காணத்தான்...
இன்று என் பொழுது உன்னோடு கழிக்கத்தான்...
இன்று என் நடை உன் கை விரல் பிடித்துத்துதான்...
இன்று என் கண்ணில் உன் முகம் மட்டும் தான்...
இத்தனை கனவுகள் இருந்தாலும்
அதை கனவில் மட்டும் கண்டு...
கல்லாக உன்னைக் கடந்து செல்கிறேன்
இது கூட உன் மேல் உள்ள காதலால் தான்..