vicky047 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vicky047 |
இடம் | : |
பிறந்த தேதி | : 11-May-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 8 |
தோழி ஓ தோழி கணவனை தேடி போவாய் என்றோ
மனம் விட்டு பேச மாட்டியோ நின்றோ
உன் வாழ்க்கை தேடி நீயும் சென்றும்
மறக்காமல் இருப்பாயா என்னை என்றும்
செலவிட்ட நேரத்தை விழி ஓரம் கண்டேன்
வலி ஏற்ப்பட்ட போது நீ கூறிய வார்த்தைகளை
புரிந்து கொண்ட மனம் ஏனோ
என்னை பிரிந்து செல்ல கூடாது.........
அம்மாவின் ஆசை ஏனோ
அமாவாசை போல காரிருளில் மறைந்தது தானோ ........
நீயும் நானும் யாரோ இன்று!
நினைவில் வாழ கற்றது நன்று!
மனம் - நேற்றில் காற்றாய் திரியுது சென்று!
காலம் உன்னையும் என்னையும் பிரித்ததோ என்று!?
கார்மேகமாய் கோலம் போட்டாய் வந்து
உன் வதனத்தில் வெண்ணிலவை கண்டேன் அன்று!!
இதய வாசலின் சாவியை தொலைத்தேன் நின்று
உன் கள்ளசிரிப்பின் குழியில் மறைந்தாய் - எனை வென்று!!
சிறுதுளிகளில் - நாம் பிரிந்த நொடிகளை கொன்று
கைகோர்த்து திரிந்தோமே கனவுலகில் அன்று!!
மதி - விதியையும் காலம் வென்றதை கண்டு
மனம் மூங்கிலாய் உடைந்ததே நம் நினைவுகளை கொண்டு
மூங்கிலினுள் - முகிலாக நம் காதல் ஒலிக்கட்டுமே என்று!
மாரிய பயணமே -
நீயும் நானும் யாரோ இன்று!!...
_கிறுக்கி
அறியா வயதில் அறியாமல் பூத்தக் காதல்
நாணத்தின் அறிமுகம் கிடைத்த முதல் தருணம்,
பிஞ்சுக் குழந்தையின் பால் மனம் மாறா சிரிப்பை போல்
என் மனதில் பதிந்தது அவன் முகம்.
பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு மட்டுமல்ல,
ஆணின் பார்வைக்கும் ஈர்க்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது!!
வாழ்வின் வடிவமே தெரியா வயதில்
இனி வாழ்வே அவனோடு எனத் தோன்றியது எதனால்?
வெறும் ஈர்ப்பு என்று மனம் சொல்ல
இல்லை இது காதல்தான் என தோழி சான்றளித்தாள்.
அறிவியல் படிக்க நேரம் கிடைக்கவில்லை,
நான் அறியாதவன் பற்றி யோசிக்கும்
நேரம் மட்டும் எப்படி கிடைத்தது?
முதல் பார்வைக்கு வெறுப்பு வந்தது,
இரண்டாம் பார்வைக்கு விருப்
பிரசவித்த பின்
தான்
பெண் தாயாகிறாள்
என்று
யார் சொன்னது?
பெண்ணாக பிறந்த
ஒவ்வொருத்தியும்
தாயாகவே
மிளிர்கின்றாள்!
#sof_sekar
எத்தனையோமுறை உனக்கே தெரியாமல் உன்னை ரசித்ததுண்டு,
உன் கண்ணை ரசித்திருக்கிறேன் , உன் உதட்டை ரசித்திருக்கிறேன்,
உன் குதிரைவால் கூந்தலை எண்ணில்லடங்காமுறை ரசித்ததுண்டு,
நீ உன் இடது கை அசைத்து பேசுகையில் , அந்த சுண்டுவிரல் என்மீதுபட்டு விடாதா என்று எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு,
உன் "சுடிதார் ஷால்" வாசனையை கூட ரசித்திருக்கிறேன்,
நீ ஒரு விதமாக முகம் சுழிப்பாயே அதையும் ஏங்கி ஏங்கி ரசித்ததுண்டு,
நீ திட்டும் தோரனைக்காகவே, பல தவறுகள் செய்ததுண்டு,
இறுதியாக
"வாழ்க்கை இறுதிவரை என்னை காப்பாற்றுவாயா" என்று கேட்டாய்
அதற்கு நானோ கூறினேன்
'
'
"நீ தான் என்னையே காப்பாற்ற வேண்டும்
உன் பார்வை
கண்களின் பார்வையில் நடந்ததை கதையை சொல்வாய்
கன்னத்தில் விழும் குழியால் கவலை தீர்ப்பாய்
மனம் விட்டு பேசி என் குணம் புரிந்து சென்றவள்
உயர் மதிப்பு கொண்டவள்
உயிராய் என்னை நினைப்பவள்
இளகிய மனம் ஏனோ
இருவரில் இருப்பதால் தானோ
மழலை போல பேசினோம்
எந்த வார்த்தையும் மறைக்காமல்........
அன்பான சகியே
ஆருயிர் தோழியே
இன்பமாய் நீ சிரித்தாய்
ஈகை போல உன் நட்பை கொடுத்தாய்
உன்னிடம் மட்டும்
ஊர் பட்ட கஷ்டம் எல்லாம்
என் மனம் விட்டு
ஏனோ சொன்னேன்
ஐ யாய் கடந்து செல்லும் என்பாய்
ஒரு நூற்றாண்டு கூட கடந்தாலும்
ஓயாமல் பேசுவாய் என நம்புகிறேன்
அவ்வை போல ஆனாலும்............
அளவு கடந்த அன்பை அலை போல
நிமிடம் விடாது தொடர்ந்து வருவேன்
கடல் போன்ற நம் நட்பினால்...................
பிரியாதிருக்க வரம் கேட்பேன்
பிரியமான தோழி உடன் இருக்க.............
நண்பர்கள் (6)

பச்சைப்பனிமலர்
திருகோணமலை

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

ரங்கராஜ்
சமத்தூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
