கிரிகாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிரிகாசன்
இடம்:  Essex, UK
பிறந்த தேதி :  31-Oct-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2012
பார்த்தவர்கள்:  1648
புள்ளி:  270

என்னைப் பற்றி...

பிடித்தவை கவிதை,கணனி
குடும்பம் மனைவி, மூன்று பிள்ளைகள்
வேலை இல்லை ஓய்வு
600 கவிதைகளோடு என்பக்கம்
www.kuyilinosai.blogspot.com இன்னும்
fliphtmi5.com/homepage/tycw

என் படைப்புகள்
கிரிகாசன் செய்திகள்
கிரிகாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 11:02 pm

மலை மேவும் காற்றே நில் மகிழ்வான வாழ்வுக்கு
மனிதர்க் கின்றெது வேண்டும் சொல்லு
கலையாம் நற்றமிழ்சொல்லிக் கனிவான தமிழ்தன்னைக்
காதல்செய் அதுவேண்டுமின்று
வலை கொண்ட மீன்போன்று வந்தாடும் விண்மீன்காள்
வானத்தில் நின்றெம்மைக் கண்டீர்
கலைசிந்தும் சமுதாயம்காணும் இன்றின்னல்கள்
கலைந்தேக எதுவேண்டும் இன்று

மலை போலும்திடமான மனிதர்காள் மதிகொண்டே
மண் காக்க வேண்டும் எழுந்தின்று
தலைபோகும் நிலையின்றித் தமிழினுயர்வான தரம்
தனைக் கொள்ள இயல் வேண்டும் இன்று
இலையோடு தலையாட்டும் இளம்பூவின் கிளைமரமே
எதுவேண்டும் தமிழ்வாழ `இன்று
குலைவாழை பழம்தந்து கொள்ளும் ஓர் வாழ்வோடு
குலம்வாழத் தனைஈயும் அன்பு

சரிந்தாடும

மேலும்

கிரிகாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 11:00 pm

தமிழ் அன்னை மடிமீது தவழ்கின்றவன்
தமிழ் என்னும் மதுவுண்டு மகிழ்கின்றவன்
அமிழ்தென்னும் சுவை கண்டு திளைக்கின்றவன்
அழும்போதும் இசைசந்தம் குரல்கொண்டவன்
குமிழ்வண்ண ஒளிவானில் கதிர் போலுமே
குறைவற்ற வகை வாழ்வில் அருள்கொண்டவன்
சிமிழ் கொண்ட கலைவண்ணம் வரை ஓவியன்
சிலை யாக்கும் சிற்பிகை உளி போன்றவன்

மகிழ்வென்ப துளம் கொள்ளக் கவிவந்ததா
மனம் கண்ட கவியாலே மகிழ்வானதா
அகில் கொண்ட தீயாலே மணம் வந்ததா
அதுவந்த பொழுதோடு கவிவந்ததா
துகில் சூழும் இளமேனி தமிழ் என்பதா
துள்ளும் நல்லிசை சந்தம் கவிகொண்டதா
முகில் வானம் என நெஞ்சம் விரிகின்றதா
முகிழ்கின்ற கவிதான் என்மூச்சானதா

நலங் கொண்டு மனமிங்கு பூக்கின்ற

மேலும்

கிரிகாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 10:58 pm

தொழமன மதில்நிறை துணிவெழ அருள்கொடு
துணையிரு பெருஒளியே
குழலிசையென மனம் கொளும் உணவினிதுற
குரல்கொடு நிறையெனவே
வழமையென் றருகினில் வரமொடு வரவெடு
வழிதரும் மனதுறைவே
முழமென உயரந்திட முடிவென வழுகிடும்
முயற்சிகள் நலம்தரவே

உளமதில் அருளுரை உயரிடம் தருகுவை’
உதவியில் பெருஒளியே
இளமையின் வகை மனம் இருளகன்றிடச் சுகம்
இலங்கிடக் கொடுவரமே
குளமதில் விரிஅலை குதித்திடும் தொகையெனக்
கொடு கவி கவிகவியே
மளமளவென வரும் மதியிடை உனதுசொல்
மடைதிற நதி் யெனவே

கருவெழ உயிர்கொடு கவிதைகள் பொழிமழை
கனமெழப் பெருங் கடலே
தருவதில் குருவிகள் தருமிசை தனில் குயில்
தரமென இனிதுறவே
தருவன மதில்நிறைந் தருவன கனி ச்சுவை
தருமே

மேலும்

கிரிகாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2015 10:56 pm

கானம் பாடும் குயிலோசை
காலைச் செவ்வண் ணடிவானம்
வானத் தூடே விரைபட்சி
வந்தே போகும் தென்றலுடன்
கூனற்பிறையும் கொட்டருவி
கொள்ளும் ஓசை குளிர்காற்]று
ஆனந்தத்தை அள்ளித் தரும்
ஆகா இன்பம் இன்பமன்றோ

வண்ணக்கலவை வரை கரமும்
விந்தை தீட்டும் ஓவியங்கள்
எண்ணத் தோற்றும் உருவங்கள்
ஏற்றோர் கல்லில் சிலையாக்கம்
கண்ணின் காட்சி காவியங்கள்
கவிதை ஊற்று காண் தமிழும்
உண்ணத் திகட்டா தேனமுதம்
உள்ளோர் இன்பம் இன்பமன்றோ

சேனை, படைகொள் சிற்றரசன்
சிந்தனை வல்லோர் அறிவூட்டல்
மானை யொத்த மங்கையரின்
மஞ்சம் தூங்க பஞ்சணைகள்
தேனை யொத்த பேச்சினிமை
தேங்கிக் காணும் பொற்குவியல்
வானை யொத்த புகழாரம்
வாய்த்தால் இன்ப

மேலும்

கிரிகாசன் - கிரிகாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2015 4:44 pm

செவ்வானத் தில் நிலா சிரிக்கின்றதே - அதன்
சிங்காரச் செவ்வண்ணம் ஜொலிக்கின்றதே
கொவ்வைச் செவ்வாய்க்கென்ன முன்னானதோ இதழ்
கொஞ்சும் புன்னகைத் திங்கள் எனும்போதையோ
அவ்வை அங்கிருந்தாளோ நிழலாடுதே - அந்தோ
அவள்கூனல் விழிகாண முயலானதென்
இவ்வாழ்வின் எழில்பொங்கும் பொன்னூர்வலம் - இது
என்னாசைப் பெண்கொண்ட எழிலார்வதனம்

பொன்னிற் செங்கோல் கொண்ட அரசென்பதா - இங்கே
பொழியும் நல் நிலவெங்கும் நுழைகின்றதா
தன்னாட்சி பெரிதென்று தரைகொண்டதா - அது
தடுமாறா ததிகாரம் பெறுகின்றதா
மென் மாதர் தனைவெலல மலர்கொண்டதா - அதை
மதனேந்தும் வில் கொண்டு எறிகின்றதா
வன் னாண்மை தனைமுற்றம் வசங்கொண்டதா - உலா
வரும்போது திருமங்கை இதுவென

மேலும்

நல்ல சந்தம், நல்ல கற்பனை நல்ல கவிதை! 30-May-2015 7:11 pm
சின்னவர்நல் அமுதுண்ணக் கண்ணாடியுள் - அது சிறைப்பட்டும் விளையாடிச் சிரிக்கின்றதா நன்நீரின் சிறுஓடை இதன்மஞ்சமா - இவள் நடம்செய்யக் குளிர்ப் பொய்கை எனும்மேடையா நல்ல உவமை... 26-May-2015 8:55 pm
இருவருக்கும் நன்றிகள் 26-May-2015 12:54 am
அருமையாக உள்ளது ஐயா ! 25-May-2015 10:49 pm
கிரிகாசன் - கிரிகாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2015 4:39 pm

தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ

சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ

பொன்னெனவும் மின்னுமொளி அந்த

மேலும்

நன்றிகள் நிலாசூரியன் அவர்களுக்கு என்கவிதைகள் மேலும் குயிலின் ஓசை எனும் பக்கத்தில் உண்டு தேடி பாவிக்கவும் 25-May-2015 5:12 pm
சந்தம் அழகோ அழகு, தாங்களைப் போன்றோர்களால்தான் தமிழ் இன்னும் இன்னும் மேன்மையடைகின்றது, 25-May-2015 4:49 pm
கிரிகாசன் - கிரிகாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 5:27 am

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கை

மேலும்

நன்றிகள் கோடி! 13-Feb-2015 2:49 pm
காதல் பைத்தியம் கவிதையில் சொல்லுது காதலுக்கான வைத்தியம்.. மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:32 am
கிரிகாசன் - கிரிகாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 5:55 pm

நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை
நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை
தோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலை
தூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியை
நீற்றென உட லாக்கிய பின் நேரும் நற்சுகம்.
நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார் இதை
நாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினை
நாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனை

சேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனை
சீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லை
போற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலை
பூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலை
ஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரை
இவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வி

மேலும்

நன்றிகள்! இது இலேசானதாகவே எழுதினேன். தலைப்புக்கு ஏற்றதல்ல .பின்னர் தலைப்பை கொடுக்கும்போது திசை மாறிவிட்டதோ? எதிர்பார்ப்பு உள்ளே இல்லையோ? தவறுதான் 07-Feb-2015 9:40 pm
நல்லா இருக்கு தோழனே இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து....... 07-Feb-2015 7:05 pm
கிரிகாசன் - கிரிகாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 10:44 am

(ஏக்கம் பெண்களுக்கு மட்டும்தானா இல்லையே)

பூப் பறித்தேன் மாலைசெய்தேன் பூவைக்குச் சூடப்
பொன்னிழையில் கோர்த்துவைத்தேன் புன்னகை காணத்
தோப்பினிலே மாலையிளந் தென்றலும் வீச
தேவியவள் முன்நடந்தேன் சேதியும்கூற
காப்பிருந்த கையணைக்கும் காட்சியுமாகக்
காணொருநாள் கூடுமென்ற கற்பனை வாழத்
தீப்பிடித்த ஆசைகொண்டு தோளிடை சூட்ட தென்றலெனை ஆகிநின்றாள் பூ உதிர்ந்தோட

காற்றினிலே வந்த குரல் கானமும் பாடக்
கண்கள் முன்னே காண் அழகோ ஓவியமாக
விற்றிருந்தாள் வண்ணமலர் பொய்கையும் ஆட
வெற்றிஎன்றே தோன்றியது வேதனை போக
ஈற்றினிலே கண்டவளை என்வசமாக்க
இன்ப உணர்வோடி மனம் இச்சையில் பூக்க
ஏற்றிடுவாய் என்றணைக்க எந்திழை கொள்ள

மேலும்

ஆஹா ஆஹா..! என்னவொரு ஒரு சந்த நடை..! இந்த கவிதைக்கு என்ன கருத்திடுவது? . ரசனையில் மூர்ச்சையாகி விட்டேன்..!! 07-Jun-2014 1:23 pm
மிக மிக ரசித்தேன். தெள்ளிய நடை தீந்தமிழ் சொல்லாடல். 07-Jun-2014 11:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (41)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
A. Prem Kumar

A. Prem Kumar

Chennai
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (41)

தமிழ்மகன்

தமிழ்மகன்

தஞ்சாவூர்
kalapriyan

kalapriyan

Tirunelveli
A. Prem Kumar

A. Prem Kumar

Chennai
மேலே