எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலைநேரம்,

சாலையோரம்,

என் காதுகேட்டது ,ஒரு

பரிதாபக் குரல்.

இது என்ன !

எமனின் பாசக்கயிறு

என் கழுத்திலா?

வேண்டாம்! வேண்டாம்!

அவனைத் தடுத்து நிறுத்துங்களே!

நில்!

நீ , வராதேடா.

வா,வா, 

மற்றொரு காது கேட்டது.

என் கண்கள் வியந்தன!

திரும்பிய கழுத்தின் பக்கம்

நீ , வந்தாதாண்டா  எங்களுக்கு உணவு தருவாய்.

தயவு செய்து சீக்கரம் வா.

அந்த பனிப் பயலுக்கு என் வேலை ,

நீ, வாடா!

ஒருவனுக்காக நீ நின்றால், இந்த உலகம் என்னவாகும்,

வாடா ! சீக்கரம்.  

இரவு முழுவதும் எங்கள் மீது விளையாடினான்,

எங்கள் வலி தெரியாமல்! 

அப்போவும் அவன்நலம் ,

இப்போவும் அவன்நலம்,

சுயநலம் பிடித்தவன். 

என் உடலும்,உயிரும் பிரிகிறதே!

தங்கக் கதிர் போல

தரணியை அவன் தொட்டுவிட்டான். 

சுயநலக்காரன் மடிந்தான், 

பிறர் நலனுக்காக ! 

தன் எரித்துக் கொள்ளும், 

தியாகியே! உன்னை தாவரங்களாகிய நாங்கள் 

வரவேற்கிறோம்!வணங்குகிறோம்! பகலவனே! உன்னைப் போற்றிகிறோம்.

திரும்பி பார்த்தேன். 

என் கண்கள் சட்டென்று மூடிக்கொண்டன.

என் மனம் சொன்னது! 

நீ! என்றும் எங்களுக்கு வேண்டும், கதிரவா!சூரியா!

சூரியா போற்றி

சுந்தரா போற்றி

தலைவா போற்றி

தரணிகாக்கும் இறைவா போற்றி

எங்கள் தை மாத நாயகனே போற்றி

ஏழு குதிரை தேர் உடையவனே போற்றி

சனியின் தந்தையே போற்றி

நடுநிலைமை உடையவனே போற்றி

உன்னை வணங்குகிறேன்,

வாழ்த்தி அருளுங்கள்.

                       அகிலா.தி












மேலும்

போற்றி வாழ்த்துகின்றேன் அருமையான எண்ணம் வளரட்டும் இன்னும் 25-Feb-2020 7:49 pm

.             மகாலெட்சுமி( பாடல்)


௵தேவி வந்துவிடு -  என் சிந்தையெல்லாம் உன்
நினைவு,
சீக்கரம் வந்து நீயும்
என் சிரசோடு கலந்துவிடு.(௵தேவி)
கண்ணீரண்டும் தேடுதம்மா
உன் கருணைமுகம் காட்டிவிடு,
உன் பொன்னுருவம் காண்பதற்கு,
இந்த பூவுலகில் பிறந்தேனே..
( ௵தேவி)
உலகளந்த பரந்தாமா ,
உன் திருவடியை நான் தொழுது ,
அந்த திருமகளைக் காண்பதற்கு,
உன் திருநாமம் சொல்லுகிறேன்,
ஓம் நமோ நாராயணா,
ஓம் நமோநாராயணா . (௵தேவி)
உன் நெஞ்சில் குடிகொண்ட,
உன் தேவிமுகம் திருப்பிவிடு,
இந்த ஏழைமுகம் பார்ப்பதற்கு,
நான் ஏகாந்தம் அடைவதற்கு( ௵தேவி) 

மேலும்

கஷ்டத்தையும்,கவலையையும்

துன்பத்தையும்,துயரத்தையும்,
மறக்க,
கடவுள் தந்த சொர்க்கம்; குழந்தை.
                         அகிலா. தி

மேலும்

பலரை சிரிக்க வைக்க,

தன் பசியை போக்கிக்கொள்ள,
தன்னை
முட்டாளாக
உருவகப்படுத்தும்,
புத்திசாலி,
கோமாளி. 
                         அகிலா.தி

மேலும்

நாணங்களை எல்லாம்

குவித்து 
தலை கவிழ்ந்து நின்றவள்.
தன் ,
காதலன் விழி பட்டதும் ,
தன்னை
மறந்தாள் ,மலர்ந்தாள்
சூரியகாந்தியாய்
தன் மலர்ந்த முகம் காட்டி_-_ காதலி

மேலும்

மானுடத்தின்

சேட்டைகளை
மௌனமாய்
ரசிக்கும்
அன்பான
பெற்றோர்_-_ கடவுள்

மேலும்

துன்பங்களையும்
துயரங்களையும்
இன்பமாய்
மாற்றிவிடும்
தூயகாதல்

மேலும்

இரு மனம்

உணரும்
எல்லையில்லா
இன்பம் _-_ காதல்

மேலும்


மேலே