புதிய கடவுள் செய்வோம்..!!!

கடவுள் என்பவன்
கல்லுக்குள்ளே ஒளிந்திருக்கும்
வெறும் காட்சி பொருள் என்றே
இந்த மானுடம் எண்ணுகிறது..!!!

தவறு செய்தால் மன்னிப்பு கேட்கவும்,
குற்றம் புரிந்தால் கண்ணை குத்தவும்,
குறைகளை நிறைவேற்றவும் மட்டுமே
இங்கே கடவுள் கடவுளாக
காட்சி படுத்தப்படுகிறான்..!!

மனிதன் சாகும் வரை
கடவுளிடம் வரங்கள் கேட்கிறான்,
இந்த மனித பிறவியே கடவுள் கொடுத்த
வரமென அவன் நம்ப மறுக்கிறான்..!!

துன்பத்தில் மட்டும் கடவுளை தேடி
குறைகள் சொல்ல தெரிந்தவனுக்கு,
இன்பத்தில் கடவுளை நினைக்க
விடாமல் தடுப்பது எதுவோ..??

நன்மைகள் செய்த கடவுளுக்கு
நன்றி செலுத்த தெரியாத இவன் தான்,
தனக்கென துன்பம் வந்தால்
கடவுளை திட்டி தீர்க்கவும் செய்கிறான்..!!

பிடித்த கற்களை எல்லாம்
கடவுள் ஆக்குகிறான்,
பிடிக்கவில்லை என்றால்
அடித்து உடைத்தும் விடுகிறான்..!!

போதும் இனிஒரு புதிய கடவுள் செய்வோம்,
அவனுக்கும் கடவுள் என்றே பெயரிடுவோம்,
ஆனால் அவனையாவது
கடவுளாக இருக்க விடுவோம்..!!
இனி இங்கே கடவுள்கள் கல் ஆக வேண்டாம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (3-Jul-13, 11:01 am)
பார்வை : 86

மேலே