கவிராஜப்பா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிராஜப்பா
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  14-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2017
பார்த்தவர்கள்:  340
புள்ளி:  41

என் படைப்புகள்
கவிராஜப்பா செய்திகள்
கவிராஜப்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2021 7:50 pm

காப்பியமாய் நீ இருக்க
நாவலாய் உன்னை நான் படிக்க
சிறுகதையாய் உன் நினைவுகளை
ஹைக்கூ வாக்கி என் சிறு இதயத்தில் புதைத்து வைத்தேன் !
ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் நீ பெருங்காப்பியமாய்
என் நினைவில் வாசிக்கிறாய் தினம் ஒரு புதுக்கவிதையை !

மேலும்

கவிராஜப்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2021 8:07 pm

பெண்மைக்கு ‘ மை ’ அழகு

பாசத்தில் என்றுமே உரிமை
மதிப்பாய் பேசினால் தண்மை
அன்பு கொண்டால் இருந்திடும் உண்மை
அரவணைப்பில் அறியலாம் உன் தாய்மை
போட்டி என்றால் தெரிந்திடும் உன் வலிமை
பல வெற்றிகளை கடந்திடும் உன் கடமை
புன்னகைத்து இன்னல் புதைத்து
போராடிடும் ஓர் புதுமை
பொறுமையாய் பல பெருமைகள்
நிறைந்தது உம் பெண்மை !

மேலும்

கவிராஜப்பா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
கவிராஜப்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2018 9:55 am

ஒருவரின் உண்மைத்தன்மையைச்
சோதிக்கத் தரப்படும்
ஓர் மறைமுக ஆய்வுகோல்

மேலும்

கவிராஜப்பா - கவிராஜப்பா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 8:50 pm

பார்ப்போரின் கண்களையும் கட்டி இழுக்கும் மின்சாரக்காதலி
தொலைக்கட்சிபெட்டி

மேலும்

கவிராஜப்பா அளித்த படைப்பில் (public) syed sheik APR599c172fa32ed மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Aug-2017 10:43 am

தாய்-
அழாமல் பார்த்துக்கொள்ளும் நிரந்தரக் காதலி
காதலி-
அழுகையை பரிசளிக்கும் அன்புத்தாய்...

மேலும்

நன்றி நன்பர்களே... உங்களின் ஊக்கத்தினால் எனது எழுத்துக்கள் ஏற்றம் பெறுகின்றன.... 23-Aug-2017 5:04 pm
செம அருமை 23-Aug-2017 4:30 pm
அழுகையை மட்டும்தானா , 23-Aug-2017 11:42 am
அருமை ✌👌 17-Aug-2017 7:07 am
கவிராஜப்பா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 11:23 am

மானுடம் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம்..
சேரிடம் அறிந்து
சேராத
காகிதக்கடவுள்...
பிடித்தவர்களை ஆட்டிப்படைக்கும்
பொல்லாதப்பிசாசு....
தேடி அலைபவற்கு நீ கானல் நீரானாய்
கோடி சேர்த்தவற்கு பயமே நீயானாய்
கொடுத்துப்பார்ப்பவற்கு
உன்னாலே பெருமதிப்பு
அள்ளி சேர்த்தவர் அறிவாரோ
இல்லாதோர் பறிதவிப்பு
இனியும் உன்னை இங்கு கடவுளென
போற்ற மாட்டோம்
காரணம்
அவன் நம்பினோரை விட்டதில்லை...


- பணம்-

மேலும்

இறைவனின் ஆற்றல் அற்புதமானது அதை உணர்வது மனிதனால் முடியாத காரியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:38 pm
கவிராஜப்பா - கவிராஜப்பா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 9:26 pm

நீ ஒரு சமத்துவவாதி
மேடு பள்ளங்களை பார்க்கமாட்டாய்..
நீ ஒரு தைரியப்போராளி
தடுக்கும் தோல்விகளையும்
தாண்டி வருவாய்....
நீ ஒரு துடிப்பானவன்
உன் பயணத்தில் வேகத்திற்கு பஞ்சமில்லை...
நீ உண்மையான உழைப்பாளி
நேரம் காலம் பார்க்கமாட்டாய்...
நீ எளியவனின் பங்காளி
சிறு புல்லிற்கும் உன் பங்கிருக்கும்..
நீ ஒரு தன்னலம் பாரா தியாகி
உன்னை இடையிடையே எல்லோரும் அள்ளிடலாம்....
நீ ஒரு நிகரில்லா தலைவன்
உன் பின்னால் திரண்டு வரும் பெரும்படையால்..
நீ ஒரு பாசம் கொண்ட பொறியாளன்
பல்லுயிர் புசித்திருக்க புதுப்பாதைகள் அமைத்திடுவாய்..
தவித்திடும் மானிடற்கு
தன

மேலும்

நதியை நங்கையாய் மட்டுமே சொல்லி அறிவேன்..முதன்முதலில் நாயகனாய்..அருமை நண்பா 20-Aug-2017 7:11 pm
உமது ஊக்கத்தினால் என் தேடல் இயற்கையை இன்னும் நேசிக்க வைக்கிறது.... நன்றிகள் பல 20-Aug-2017 11:18 am
நதி என்றும் இயற்கையின் துடிப்பான குழந்தை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:39 am
கவிராஜப்பா - கவிராஜப்பா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2017 9:35 pm

மழை பெய்தது
நல்ல வேளை
கைப்பேசியை பத்திரமாக கையில் எடுத்து....
மனைவியிடம் சொன்னான் "குழந்தை பத்திரம் "...

மேலும்

நன்றி அன்பரே 20-Aug-2017 11:16 am
காலத்தின் நிழலை காட்டும் கண்ணாடி போல் நவீன சாதனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:41 am
கவிராஜப்பா - கவிராஜப்பா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2017 5:53 pm

எங்கள் இந்தியா இது எங்கள் இந்தியா
எளிய பல தலைவர் வாழ்ந்த இனிய இந்தியா

வீடு வாசல் மறந்து பல வீரர்கள் அன்று
நாடு காக்க செய்த தியாகம் சொல்லிடுவோம் இன்று
வெள்ளையனின் அடிமை கண்டு வீரு கொண்ட நாடு
மெல்ல மெல்ல முயற்சியாலே உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்….)

தலைமுறைகள் வளர பல தலைவர்கள் வீழ்ந்து
கடைமைகளை உணர்ந்து நாம் உண்மை வழி வாழ்வோம்
புரட்சி கொண்டு வறட்சி வென்று வளர்ச்சி கண்ட நாடு
வறுமை நீங்கி பெருமை ஓங்கி உரிமை வென்ற நாடு
இது வலிமை கொண்ட நாடு ( எங்கள்…)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கலிகாலன்

கலிகாலன்

புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கலிகாலன்

கலிகாலன்

புதுச்சேரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே