எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .  


எண்ணமும் செயலும் ஒன்றானால், அதிலும் அவை அடுத்தவரை பாதிக்காமல் இருந்து, அவர்களுக்கு மகிழிச்சியைத் தருமானால் நமது சிந்தனை சீராக உள்ளது என்பதை பலரும் பாராட்டுவார்கள். நாம் மேலும் சுயநல எண்ணத்தைக் கைவிட்டு நேர் வழியில் செல்வோமானால் நம்மைவிட உயர்ந்தவர் மண்ணில் யாரும் இல்லை. இதனால் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் நம்மை நன்கு மதிப்பதோடு நமக்கு ஓர் அரணாக இருப்பர் என்பதில் ஐயமில்லை . 

பழனி குமார் 
09.12.2025    

மேலும்

அவளுக்கு என்னை பிடிக்குமாம் ஆனால் என் மீது காதல் இல்லையாம்


 என்னுடன் பயின்றவள் என்ற உறவுமுறை மட்டுமே அவளுக்கும் எனக்கும் 
அவளிடம் நான் பேசியதே இல்லை அவளின் அருகில் தெரியாமல் கூட அமர்ந்ததில்லை 
அவளின் பெயர் மட்டும் நன்றாக தெரியும் எனக்கு - ஆனால்
 ஒருமுறை கூட அவளின் பெயரை உச்சரித்ததே இல்லை 
கல்லூரியில் என்னை கண்காணிப்பாளாம் 
கல்லூரியில் என்னை கண்ட உடனே எனக்கு பிடித்தவன் வந்து விட்டான் என்று அவளின் நண்பர்களிடம் கூறி மகிழ்வாளாம் 
கல்லூரி முடியும் வரை என்னுடன் அவள் பேசியதே இல்லை
 நானும் அவளுடன் பேசியதே இல்லை கல்லூரி முடிந்த பிறகு இடையில் ஒரு நாள் எதிர்பாராத சந்திப்பு அதில் வெறும் நலம் விசாரிப்பு மட்டுமே 
பதினைந்து ஆண்டுகள் கழித்து சொன்னாலள் உன்னை பார்த்ததிலிருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சற்றென்று கூறிவிட்டால் அது காதல் கிடையாது  ஆனால் உன்னை எனக்கு பிடிக்கும் என்று 
அவள் காதல் கிடையாது என்றதும் என்னுள் அவள் மீது காதல் வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது எனக்கு

மேலும்

✅ தலைப்பு: இறப்பின் அமைதி


✅ கவிதை:

என் இறப்பால் யாரும் துயரமடையாவிட்டால்,
இப் பூவுலகில் நான் வாழ்ந்தது வீணல்லே;
நான் சென்ற பினும் யாரின் கண் நீர் விழாவிட்டால்,
அதுவே எனக்கு பெரிய அதிர்ஷ்டம் அல்லவோ!
— ✍️ Gopi S

மேலும்

அனாதைகள் என்றழைத்தால்  

என் மனது நிரம்பி வழிகிறது 
வருத்தமிகு காட்சிகளளால் !
ஆழ் கடல் முழுதும் உள்ள 
சோக அலைகள் எழுகிறது !
ஆதரவற்றவர் என உச்சரித்தால் 
ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக  !

நம்பி வந்தவருக்கு உதவிடுவார் 
என்றெண்ணி இருந்த எவரும் 
யாசித்து காத்திருந்த பலரை 
யோசிக்க வைக்குது இந்நிலை !

வாழும் மனிதர்களை 
வையகமே நினைத்திடு  !
வறுமையின் சிக்கி தவிப்போரை 
ஆதரவின்றி  அகிலத்தில் வாழ்வோரை 
நல்  உள்ளங்களே இயன்றதை செய்திடுக !


பதனி குமார் 

மேலும்

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

மேலும்

ஊசலாடும் உயிராக 

ஊரார் தவிக்கையில 
ஊரெங்கும் சுற்றிவருது 
உண்மையோ இடமின்றி 
வாழ்ந்திட வழியின்றி 
பொய்யோ வலம்வருது 
பொய்கையில் நீராடுது !
வாய்மையோ வறண்டது 
வாழ்ந்திட  வழிதேடுது  !
ஏங்குகிறது  எதிர்காலம் 
வளரும் தலைமுறையை 
எண்ணி வருந்துகிறது !

பழனி குமார் 


மேலும்

பலமுறை பாதம் தழுவியபோதிலும்.

மன்னிக்க மனமில்லை..,
சுனாமிக் கடலலையை ....

மேலும்

 


இதய வாசல் திறந்திருந்தால் 
.ஈ எறும்பும் உள்ளே நுழையும் 
ஈகை இரக்கம் வெளியேறும் !
நெஞ்சில் ஈரம் வற்றிவிட்டால்
அள்ளி அள்ளி கொடுப்பவரும்
கிள்ளி எடுத்து தந்திடுவார் !
உள்ளத்தில் காதல் அரும்பினால் 
கிளர்ந்த உணர்வுகள் உருபெறும் 
தளர்ந்த மனமும் வலுப்பெறும்  !
பிணக்கால் பிரிகின்ற உள்ளங்கள் 
கலைந்து சென்ற மேகங்களாய் 
கிளைகள் முறிந்த மரங்களாகும் !
அறிந்ததை கூறினேன் அடியேன் 
அனுபவத்தில் கண்டவன் நான் !
எண்ணத் துளிகளை எழுதினேன் 
இதயத்தில் தேங்கிய துளிகளை 
வரிகளாய் வடித்து பதிவிட்டேன்  !


பழனி குமார்   

மேலும்

இயக்குபவரின் வழிகாட்டுதல் படி 

இயங்குகிறது ரயில் பெட்டிகள் 

மேலும்

எல்லா நகைச்சுவையும் 

நடக்கும் இடம் 
பேருந்து பயணம் 

மூன்று பேர் 
அமர வேண்டிய இருக்கை 
அவரது துணிப்பையும் 
இடம் பிடித்துக்கொள்கிறது 

ஆ என்கிற சங்கீத சத்தம் 
பாடியவர் யாரப்பா ?? 
யாரோ கால மிதிச்சுட்டாங்க
கண்ணீர் ததும்பும் குரலில் 
அவரின் பேருந்து பயணம் 

தற்காத்துக்கொள்ள உயர்த்திய கைகள் 
அருகில் இருப்பவரின் 
மூக்கை தட்ட 
தட்டியவர் யாரென்று ? 
எட்டிப்பார்க்கிறது 
சிறு துளி ரத்தம் 

காற்றாற்று வெள்ளம் 
ஊரை சூழ்தாற்போல 
தூக்கம் நிரம்பி 
வழிகிறது ஒருவருக்கு 
பேருந்து பயணம் 

முந்நூறு ரூபா 
சேலை - என்ற 
முணுமுணுப்புக்கிடையில்.....

கொஞ்சம் தள்ளி நில்லுமா 
பெண்களுக்குள் சலசலப்பு 
அதுவும் பேருந்து பயணம் 

கொஞ்சல் சிரிப்பைத் தரும் 
சில்லறைகளுக்கு தட்டுப்பாடு 
நடத்துநர் சலித்துக்கொள்கிறார் 
பேருந்து பயணத்தில் 

முன்பக்கம் ஏறும் 
ஆண்மகன்களுக்கு 
அவ்வப்போது வார்த்தையில் 
சவுக்கடி கொடுத்துவிடுகிறார் .....

அங்கே மெல்லிய குரல் 
இளவட்டம்னா அப்படித்தான் பா 

மண்டையில் ஏற 
மறுக்கும் கணித பாடம் 
போல படியில் 
பயணிக்கும் இளசுகளும் 

நடத்துநர் நிலைமை 
பாவம் என்கிறது 
அப்போது தொடங்கப்பட்ட 
நீதிமன்றம் 
பேருந்து பயணம் 

இவங்க இப்படித்தான் பா 
என்கிறது மீசை 
நரைத்த இளைஞர்கள் 

இருக்கை ஐம்பத்து மூன்று
கூட்டல் இரண்டு 
ஆனால் அதிலும் 
சந்தேகம் சிலருக்கு 

அப்படியே கொஞ்சம் 
அறிவுரை வழங்கும் 
ஞானிகள் - வியக்கிறது 
இத்தனை உலகமா என்று 

பேருந்து பயணத்தில் 
நான் இறங்க வேண்டிய 
இடம் இது தான் 

அத்தனையும் பேருந்து பயணம் 
அடுத்தும் நாம் சந்திப்போம் 

மேலும்

மேலும்...

மேலே