எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதே கனவு தான் 
அதே ஏக்கம் தான் 
இன்னும் 
யாரோ ஒருவரை 
நேசிக்கிறாய் 
யாரோ ஒருவரால் 
நேசிக்கப்படுகிறாய் 
என்ற நம்பிக்கையிலேயே 
கவிதை எழுதுகிறேன் 

ஆசையெல்லாம் தீர்த்தது 
என்ற வரியை 
எப்படி எல்லாம் 
எழுத நினைத்தேன் 
தெரியுமா ?

தூரத்து நிலா கூட்டில் 
விசும்பும் வானத்தை 
என்ன செய்வது?

கவிதை எழுத 
வேண்டுமென்ற
அவாவை 
எப்படி விட்டொழிப்பது?

மூன்று தினங்களுக்கு மேல் 
உன் நினைவை 
எப்படி முடி மறைப்பது?

உன்னை மறுதலிக்க 
என்ன காரணம் சொல்வது ?

உனக்காகத்தான் 
எழுதுகிறேன்  
உனக்குத் தெரியுமா ?

என் கடைசி வரியின் 
அர்த்தம் 
உனக்கு புலப்பட்டதா?

நான் எழுதாத 
ஏதேனும் ஒன்றை 
நீ மிச்சம் 
வைத்திருக்கிறாயா?

இமைக்கு கீழே மூலூம் 
நெருப்பை 
ஏன் கண்ணீரால் எரிக்கிறாய்?

இன்னும் உன் மறதியை ஒத்தி போடுவது எது? 
எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான்.

அவளைக் கடந்து விட்டேன் என்பதெல்லாம் வெறும் கவிதைதான் இன்னும் அவள் நீளமானவள்.....


மேலும்

சிணுங்கிக் கொண்டே இருக்கிறது....
 சிறு பிள்ளை போல் என் நெஞ்சம்
 உன் நினைவுகளால் 

மேலும்

உன்னைப் போலவே என்னை ஏமாற்றி சிரிக்கின்றன...!

 பாதையெங்கும் பரவி கிடக்கும்
 உன் பிம்பங்கள்.! 

மேலும்

என் இதழோடு மட்டும் தான் உன் ஈரமா....
இதயத்தை உடைத்து விட்டாயே இரக்கமற்றவனே..!

மேலும்

நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது. 
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்! 

மேலும்

நன்றிகள் தோழரே 10-Jun-2025 11:26 am
அருமை உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm

நான் இன்றி உன் இயக்கங்கள் இல்லை என்றாய்...
 நானில்லாத உன் நானிலம்  நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது...
பொருட்டல்ல நீ எனக்கு என்று சூளுரைத்த நான் தான்....
 பொருளற்று கிடக்கிறேன் ..!

மேலும்

நானிலம் -----என்றால் ? காதலுணர்வு வெளிப்பாடா ? 29-May-2025 6:15 pm

என் மனம் குப்பைத் தொட்டியானது...
நீ தந்த அழகான நினைவுகளெல்லாம் அழுகி போனதும் ....!

மேலும்

நீ ஊரில் இல்லாத பொழுது நீ கழட்டி போட்ட உன் அழுக்கு சட்டைக்கும் வேட்டிக்கும் உயிர் வந்து விடுகிறது!

மேலும்

நீ ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் மூட்டை முடிச்சுகளோடு என் இயல்புகளையும் சேர்த்து கட்டிக் கொண்டு செல்கிறாய் ...

எங்கு வேண்டுமோ செல் நீ இல்லாத இரவுகளில் உறங்குவது எப்படி என்று சொல்லிவிட்டு செல்...!

மேலும்

தலையணை என்னிடம் கோபித்துக் கொண்டது.
 நீ இருக்கும் போது நடுவே நந்தி போல் எதற்கு என்று அதை எட்டி உதைக்கிறேனாம் ! 
நீ இல்லாத போது அதை கட்டிக் அணைக்கிறேனாம்...!

மேலும்

மேலும்...

மேலே