உனக்காக ....

கற்பனைகள் விண்ணை முட்டும்,
உன்னை நினைக்கையில்
என் கவிதையும் கண்ணீர் சொட்டும்...
காலங்கள் கடந்த ஞானம் காற்றோடு வந்து என்னில்
உன் ஞாபக செறிவை கூட்டும் ...
தேகமும் வீழ்ந்த பின்னும் தேயாத உந்தன் எண்ணம்
திக்கெட்டும் பரவி என்னை தெவிட்டாமல் பருக சொல்லும் .........
மோகமும் என்னில் இல்லை உந்தன் தேகமும் தேவை இல்லை ......
தேன் போன்ற உந்தன் சொல்லும்,
தெளிவான திருமுகமும்
நினைத்தே நான் வாழ்ந்து விட்டேன்
நெடுநாட்கள் தொலைத்து விட்டேன்
நிறம் மாறா உந்தன் நேசம் என்றென்றும் வேண்டுகின்றேன்....
உன் நினைவோடு நீண்ட காலம் வாழ நானும் ஏங்குகின்றேன் .....

எழுதியவர் : மாதவன்.R (14-May-13, 10:53 am)
சேர்த்தது : Madhavan2013
Tanglish : unakaaga
பார்வை : 98

மேலே