சாதிவெறி

தவம் கிடந்து கிடைத்த வரமாய்
தாய் தந்தையின் தவப்புதல்வி நான்..
அர்ப்பணிக்கப்பட்ட ஆசியாய் அன்பை - நானும்
அனுபவித்தேன் அவரிடம் அனுதினமும் அமுதசுரபியாய்!!!

இமைகள் மறுத்ததில்லை எனக்காக என்றும்..
இன்றோ! இதயம் இடிந்தவராய் ஏனோ,
இணையாக்க விரும்பிய இளைஞன் - அவன்
இதயம் கவர்ந்தாலும், இனத்தில் இல்லாததால்!!!

சாதிவெறி எனும் சாஸ்த்திர சாக்கடையில்
சாயம் பூசிய சமூக அவலத்தால்
அவமானமே எஞ்சிய நிலையில் - நீவீரோ
துக்கம் தாழாமல் தூக்கில் கண்முன்னே!!!

காப்பாற்ற முடியாமல் கதறுகிறேன் நான்..
இனவெறி பிடித்த இரக்கமிலா ஈனர்களால்,
இறந்து இரு தினங்களாகிவிட்ட - நான்
ஆவியாய் அலைகிறேன் அழுகிறேன் அருகே!!!


- குட்டி

எழுதியவர் : (4-Jun-13, 7:11 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 124

மேலே