என்னை விட்டு பிரிந்து நீ

பூக்கும் மலர்களில் எல்லாம்
நீ புன்னகையாய் இருக்கிறாய்!

வீசும் காற்றில் எல்லாம்
நீ வாசமாய் இருக்கிறாய்!

கார்கால வானத்தில்
நீ வானவில்லாய் தெரிகிறாய்!

பனி விழும் காலம் வந்தால்
நீ பனித்துளியாய் மிளிர்கிறாய்!

அஸ்தமன சூரியனின் ஒளியாய்
நீ என்னை கவர்கிறாய்!

என்னை விட்டு பிரிந்தும்
நீ என்னில் வாழ்கிறாய்.........!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (12-Jan-11, 1:23 pm)
சேர்த்தது : renga
பார்வை : 527

மேலே