கவிதை

"கரு ஒன்றை",
விதையாகக் கொண்டதுதான்
க விதை .
கற்பனையை விற்பனைக்கு
விட்டதும்தான் கவிதை.
கவினுறு கலையுள்ளம்
கண்டதெல்லாம் கவிதை.
கொண்டதொரு கொள்கையை
கோலமிடும் கவிதை.
ஆலமரமாய் ஆங்காங்கே
விழுதிடும் கவிதை.
ஆர்ப்பரித்து அன்புக்கே
அற்பணிக்கும் கவதை.
அன்று முதல் இன்றுவரை
பொன்றும் பூ கவிதை

எழுதியவர் : (20-Jan-11, 8:14 am)
பார்வை : 372

மேலே