மனிதா நில்லு குமரி பையன்

மண்ணறை ஓடும் மனிதா நில்லு
மன்னரை போல வாழ்வதை சொல்லு
மனிதனாய் வாழுற வழியினை வெல்லு
மறுத்தால் நாளை உன் தலயிலே கல்லு..!

தரணியில் தாயே தலைமகள் என்பது அறிவாயா நீ
தரத்தை விட்டு உன் தாயை ஒதுக்கி செல்வாயா நீ
தாரம் உன்னில் நிறைவாய் வாழ உழைப்பாயா நீ
தலை வணங்காது அநீதியை எதிர்த்து நிற்பாயாநீ..!

வாழ்வில் என்றும் மனதை அடக்கி வாழ்வாயா நீ
வரதட்சணைஇன்றி மணமகளை தான் தொடுவாயா நீ
ஆதரவில்லா அனாதை சொத்தை புசிப்பாயா நீ
அபலையை கண்டால் அவர்தம் உணர்வை மதிப்பாயா நீ..!

ஏழை எளியவர் கண்ணில் பட்டால் ஒதுங்காதே நீ
ஏற்றம் பெறுவாய் இருப்பதை ஈய மறுக்காதே நீ
நட்பை பெருக்கி நலமாய் வாழ தயங்காதே நீ
நட்பாய் பகைவன் பக்கம் வந்தால் சேர்க்காதே நீ..!

உடலில் பலமும் பணமும் இருந்தால் மறக்காதே நீ
உன்னயலார் மற்றார் வாழ்வு ஒழிக்க துடிக்காதே நீ
உலகம் அழியும் நாள்வரை வாழ்வார் யார் சொல் நீ
உண்மை அறிந்து நல்லன செய்யத் துணிவாயே நீ..!

-----------------------------குமரி பையன் --------------------------

எழுதியவர் : குமரி பையன் (12-Nov-13, 1:18 am)
Tanglish : manithaa nillu
பார்வை : 264

மேலே