நண்பனே
ஆற்றங்கரை ஓரம் …
மாலை நேரம் …
சிவந்த வானம் …
காக்கைகளின் கூடு திருப்பம்…
வள்ளத்திலே நீயும் நானும்…
கொறிக்க கடலை முட்டாய்…
திருடி குடிக்கும் இளநீர்…
நேரத்தின் வேகம் அறியாமல்…
பத்தும் பறக்கும் பசியும் மறக்கும்…
யாம் இருவர் ஒன்றாய் இருக்கையிலே ..
தினம் பார்க்காமல் இருந்ததில்லை...
உன்னோடு பேசாமல் உறங்கியதுமில்லை …
நீ இல்லாமல் மைதானம் பிடித்ததில்லை…
உன் நண்பர்கள் எனக்கு நண்பர்களுமில்லை...
என் நண்பர்கள் உன் நண்பர்களுமில்லை.../
என்றும் அன்புடன் - ஸ்ரீ-
இன்றுவரை உன் உயிர் நண்பனாய் நான் மட்டும்