நண்பனே

ஆற்றங்கரை ஓரம் …
மாலை நேரம் …
சிவந்த வானம் …
காக்கைகளின் கூடு திருப்பம்…
வள்ளத்திலே நீயும் நானும்…

கொறிக்க கடலை முட்டாய்…
திருடி குடிக்கும் இளநீர்…
நேரத்தின் வேகம் அறியாமல்…
பத்தும் பறக்கும் பசியும் மறக்கும்…
யாம் இருவர் ஒன்றாய் இருக்கையிலே ..

தினம் பார்க்காமல் இருந்ததில்லை...
உன்னோடு பேசாமல் உறங்கியதுமில்லை …
நீ இல்லாமல் மைதானம் பிடித்ததில்லை…
உன் நண்பர்கள் எனக்கு நண்பர்களுமில்லை...

என் நண்பர்கள் உன் நண்பர்களுமில்லை.../

என்றும் அன்புடன் - ஸ்ரீ-

இன்றுவரை உன் உயிர் நண்பனாய் நான் மட்டும்

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (10-Dec-13, 4:08 pm)
Tanglish : nanbane
பார்வை : 91

மேலே