தப்பியது கடவுள்

திருக்கோஷ்டியூரில்
ஆனந்த சயனத்தில்
மூன்று பேர் ......
உண்டியல் உடைக்கப்பட்டு
பணம் கொள்ளை ...!
"காவலர்கள் இருந்தும்
துங்கியதே
காரணம் திருட்டுக்கு" -போலீஸ்
தப்பியது கடவுள்
எப்போதும் போலவே
இப்போதும் ...!!
(ஆதாரம் ;தினந்தந்தி 01 .02 .11 )

எழுதியவர் : சுப.முருகானந்தம் (1-Feb-11, 3:37 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 462

மேலே