திணிக்கப் பட்ட இடைவெளிகள்

செடிகள் கொடுத்தது
பூங்கொத்து....!

விழிகளால்
வாங்கிக் கொண்டேன்...!

நன்றி என்றது...!

எதற்கு என்றேன் மவுனமாக...

என்னை ரசித்ததற்கு....
என்று அது சொல்ல வருவதற்குள்...

அங்கே என்ன வேடிக்கை ?
எடுயா வண்டிய.....

அவசரப் படுத்தினான் சிக்னலில்
பக்கத்து வண்டிக் காரன்.....

யதார்த்த வாழ்க்கையை புரிந்து கொண்டேன்...!

துரத்துகிறது கடிகார முட்கள்......

தொலைவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்

இப்போது

கண்ணுக்குத் தெரியவில்லை அந்தப் பூச்செடி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (22-Dec-13, 3:01 am)
பார்வை : 78

மேலே