தமிழனே கைகோர்த்து சேர்வீர்

வஞ்சகம் நெஞ்சினில் கொண்டு…
பிரிந்த நெஞ்சங்கள் பலர் நம்மில்…
தமிழன்னெனும் பெயர் கொண்டு…
சேரதிருக்கும் நெஞ்சங்கள் இங்கு நம்மில்…

எத்தனை ஜாதிகள் நம்மில்…
பசிதீர்க்கும் பாலினில் ஜாதிகள் கண்டதுண்டோ…
எத்தனை பேதம் நம்மில்…
நம் இறப்பினில் பேதங்கள் கண்டதுண்டோ…

ஜாதி பேதம் கொண்டு….
கூறும் வஞ்சக வார்த்தைகள் கோடி…
நீரும் நிலாம் கொண்டு…
இங்கு பேதங்கள் வேதங்கள் கோடி…

ஜாதி பேதங்கள் வேண்டாம்…
ஒன்றாய் வாழ்ந்திடும் மானிடன் போதும்…
காக்கையின் ஒற்றுமை காண்போம்…
தமிழ் வேங்கைகள் ஒன்றாக சேர்வோம்….

ஆயுதம் ஏந்த வேண்டாம்…
நல்புத்தியால் திறன் சாதித்தால் போதும்…
வேற்றுமை வளர்த்திட வேண்டாம்…
உயிர் கலந்திட்ட தமிழனாய் வாழ்வோம்…

பண்புகள் தந்திட்ட தமிழை…
வையகம் உணர்ந்திட ஒன்றாக சேர்வோம்…
ஒற்றுமை வளர்த்திட எண்ணி…
சிதறிய தமிழனே கைகோர்த்து சேர்வீர்…

என்றும் அன்புடன் -ஸ்ரீ-
13 சனவரி 2014

எழுதியவர் : -ஸ்ரீ- (13-Jan-14, 6:52 pm)
பார்வை : 59

மேலே