எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா

தூளியை கட்டினேன் வீட்டினுள் நானும்
குளிதனை வெட்டினேன் தோட்டத்தில் நானும்

குழந்தையை மெல்லவே தூளியில் போட்டேன்
தளிர்தனை குழியிலே மெல்லவே வைத்தேன்

தாலாட்டு பாடி தொட்டிலை ஆட்டினேன்
தன்மையாய் மண் மூடி தளிர்தனை நிறுத்தினேன்

விழித்ததும் சிரித்தது மழலையே - அது என்
விழிகளில் செடியதன் மலர்களே.....

தென்றலே தாலாட்டு தேன்தமிழ் சீராட்டு
தெரிகின்ற காட்சிகள் தித்திக்கும் உறவுகள்...

ஜடப் பொருளிலும் உயிரோட்டம் - இதோ
ஜதி சொல்கிறது இடித்த வாசல் படி......

எனினும்

சொடர்ந்து நடந்து சொல்கிறேன்.....

பசியால் அழுகிறது செடி........

பாவம் - தாய்மையுணர்வோடு

அதன் இலைகள் கோதி.......

என்னோடு அணைத்துக் கொள்கிறேன்......

கருவண்டு ஒன்று பட்டெனப் பறந்து செல்கிறது..

அது நான் நேற்று

அதன் கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டு...

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jan-14, 8:26 am)
பார்வை : 72

மேலே