சாதனையாளன்

காரணங்கள் சொல்லி
விலகிச் செல்லவோ
நெருங்கிக் கொள்ளவோ
சூழல் முனையும்..

சூழ்நிலை
ஒன்றை விடவும்
ஒன்றைப் பெறவும்
துணிய வைக்கும்..

துணிவு
சூழலை ஆட்கொண்டோ
சூழலுக்கு அடிபணிந்தோ
செயலாற்றும்..

சந்தர்ப்பசூழ்நிலைகள்
விருப்பங்களையும்
வெறுப்புகளையும்
மாற்றிச் செல்லும்..

மனிதன்
சூழலால் உருவாக்கப்படுகிறான்..
மனிதன்
சூழலை உருவாக்குகிறான்..

எதுவோ இருந்துவிட்டு
போகட்டும்..
சந்தர்ப்பத்திற்கு வசப்படுபவன்
சாதாரணன்..
சந்தர்ப்பத்தைத் தன்வசப்படுத்துபவன்
சாதனையாளன்..

எழுதியவர் : இவள் பாரதி (19-Feb-14, 2:04 pm)
பார்வை : 53

மேலே