அன்பை உன்னில் விதைத்திடு

அன்பை உன்னில் விதைத்திடு ...!
அகிலமே மாறும் அதனால் ...!

கல் எடுத்து அடித்தாலும்
கனிகளை தரும் மரமாகும்...
அந்த அன்பின் விதை !

தன்னை உருக்கி
வெளிச்சம் கொடுக்கும் மெழுகாகும் ...
அந்த அன்பின் விதை !

தன்னை எட்டி உதைப்பதை
ரசித்துக்கொண்டே தாங்கிக்கொள்ளும்
தாய்மையை போல !

எவ்வளவு தோண்டினாலும்
பொறுமையாய் தாங்கும்
தாய் மண்ணை போல !

பரிக்கபடுவதற்காகவே பூக்கிறோம்
என தெரிந்தும் மலரும்
மலர்களை போல !

பொம்மை கன்றை பார்த்தும் ,
பால் சுரக்கும் ...
தாய் பசுவை போல !

நாமும் வாழ பழகிடுவோமே !
எந்திர வாழ்க்கையில் இருந்து விலகிடுவோமே !

சுற்றி இருக்கும் மனிதர்கள் புன்னகைக்க
நீ காரணமாய் இரு !
உன் வாழ்க்கை தோட்டத்தில்
மகிழ்ச்சி மல்லிகள் மணமணக்கும் !
மனம் தானாய் சிறகடிக்கும் !

இவன்,
நிலவின் நண்பன் !

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (21-Feb-14, 2:33 pm)
பார்வை : 255

மேலே