ஏன் ஏன் அது ஏன்
உலகில் பலரும் தூற்றியபோதும்
வாழ்ந்தேன் ஏன்?
புவியில் சிலர் போற்றியபோதும்
வீழ்ந்தேன் ஏன்?
எல்லோருக்கும் பொதுநன்மை
செய்தேன் ஏன்?
மனதை கருக்கும் பொறாமை
கொய்தேன் ஏன்?
மற்றவர்க்கு உதவும் நற்சொல்லை
கொடுத்தேன் ஏன்?
என்னை உயர்தும் தீயசொல்லை
விடுத்தேன் ஏன்?
யாரும் செல்லா பாதைகளில்
நடந்தேன் ஏன்?
எவரும் பார்க்கா வீதிகளில்
கிடந்தேன் ஏன்?
மதியை மயக்கும் பரிசை
மறுத்தேன் ஏன்?
மனதை மயக்கும் புகழை
வெறுத்தேன் ஏன்?
பொதுவான செயல்களில் என்னை
மறந்தேன் ஏன்?
எனக்கான செயல்களில் என்னை
துறந்தேன் ஏன்?
ஏன்? ஏன்? நான் ஒரு கவிஞன் !
ஏன்? ஏன்? நான் ஒரு மனிதன் !
ஏன்? ஏன்? நான் ஒரு நண்பன் !
ஏன்? ஏன்? நான் ஒரு அன்பன் !