உதட்டோரம் என்னவளின் வார்த்தை

உதட்டோரம் என்னவள் ...
மெல்லிய வார்த்தை ...
ஆயிரம் முத்துக்களை ..
கூடவே கொண்ட பேரழகு
வெண்மை பற்கள்....!!!

பற்களும் என்னவளின்
உதடும் உரசி தோன்றிய
உமிழ் நீர் - பஞ்சா
அமிர்த்தத்தில்
பாலும் தேனும் இணைந்த
கூட்டு கலவையடி....!!!


திருக்குறள் : 1121

காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 41

எழுதியவர் : கே இனியவன் (14-Aug-14, 8:16 pm)
பார்வை : 64

மேலே