வழிகள்

கண்களும் இதயமும்
ஒன்றை ஒன்று
போட்டி போட்டு கொண்டன
வலிகள்
உனக்கு அதிகமா ?
இல்லை
எனக்கு அதிகமா? என்று
வலிகளை சுமந்த கண்கள்
கண்ணீர் நீரூற்றை கசிந்தது
இதயம் குமறியது
மறக்க நினைக்கும் நொடிகளிக்கு மத்தியில்
சிக்கி தவித்த மனதிற்கு தெரிந்தது
உயிரை மறக்க நினைப்பது முடியாது என்று
ஆயினும்
கோபங்களின் உச்சங்களில் பிறந்த
வார்த்தைகளால்
வெறுமையை உணர்ந்த
இதயமும் உதிரங்களை கசிந்தது
இன்றுடன் முடிக்க
ஆசை கொள்கிறேன்
என் அன்பினை அல்ல
நான் என்கின்ற என் வாழ்கை புஸ்தகத்தை
ஆயினும் கோழை ஆகிறேன்
துணிச்சல் இன்றி
உன்னுடன் நான் வாழ நினைத்த ஒவொரு நொடிக்கும்
போதும் நீ கூறிய வார்த்தைகள்

எழுதியவர் : பெர்சியா (5-Sep-14, 3:36 pm)
சேர்த்தது : Persia
Tanglish : vazhigal
பார்வை : 95

மேலே