பொருத்தம்

அழகும் அறிவும்
நிறைந்த அரியதோர்
பெண்ணை பெற்ற
அய்யா அவர்கட்கு ..
வணக்கங்கள் பல கோடி..
எழுதுவது தனக்கோடி!

உங்கள் பெண்ணை பிடிச்சிருக்கு..
காதலிக்க முடிவெடுத்தேன்..
அவளும் விருப்பம் என்றாள்!
படிப்பு, நற்குணங்கள்
பதவி, அந்தஸ்து
ராசிப் பொருத்தம் கூட
அலசி விட்டேன்..
அத்தனையும் ஒத்து வரும்..
ஆனால் ....
சாதி வேறு பட்டிருப்பதால்
சாய மாட்டார் என் தந்தையென
என் மனம் கவர்ந்த தேவதை
கூறியதை கேட்டு இந்த
கடிதத்தை எழுதி விட்டேன்!
மன்னிக்கவும்..
மனமிருந்தால் ஏற்றுக் கொண்டு
மகளிடமே கூறி விடுங்கள்..
இல்லையெனில் அப்படியே
விட்டு விட வேண்டுகிறேன்..!
என் கேள்விக்கு பதில் ஒன்று சொன்னால் போதும்!
நான்கு தலைமுறைக்கு முன்னாலே எந்த சாதியிலே
சம்பந்தம் கொண்டீரோ யாரறிவார்!
உம் இரண்டு சந்ததியர் வரும் நாளில்
யாருடன்தான் உறவு கொள்வார் அறிவீரோ?
அறுதியிட்டு பதில் சொன்னால்
அந் நொடியே மறக்கின்றேன்
என் ஆசை மாதவியை!
..
பி.கு.:
கவிதை எதற்கு,
இதற்கு என்று நினைக்கின்றீர்!
தமிழ் புலவன் இவன்
உம் மீது அறம் பாடும்
நிலை வரலாம்..!

எழுதியவர் : karuna (30-Sep-14, 5:39 pm)
Tanglish : poruththam
பார்வை : 487

மேலே