நான் என்னிடம் தோற்றாலும் - இராஜ்குமார்

நான் என்னிடம் தோற்றாலும்
============================

கனவுகள் துரத்திய
உறக்கம் - ஊமையாக

இமை இமைக்காத
பார்வை - நீயாக

விழியில் ஊடுருவும்
கதிரும் - புதிராக

பறந்த இதயம்
பாதை மறந்தாலும்
பாவை உனை மறவாது

விழுந்த மனம்
வீணாகிப் போனாலும்
கவி எழுதாமல் இறக்காது

மாறாத குணம்
என்னிடமே தோற்றாலும்
உனக்கு எதிராய் வெல்லாது

- இராஜ்குமார்

நாள் : 30 - 11 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-Oct-14, 7:54 pm)
பார்வை : 468

மேலே