ருசிப்பது ஒருவன் -ரசிப்பது ஒருவன்

பணக்காரன் :-

நானோ பணக்காரன்....
நிலபலமோ
எனக்கு சொந்தக்காரன் ...

நீயோ பிச்சைக்காரன் ...
சொந்தமோ
உனக்கு கடன்காரன்....

பிச்சைக்காரன்:-

நீ கொண்ட சுமையை
நான் தாங்கி செல்கிறேன்
பல பேர் வயிறு நிரம்ப .......
நான் பட்டினியுண்டு கிடக்கிறேன் ...

நீயோ சுகத்தில் திழைக்க ,நானோ பிறர் சபிக்க செல்கிறேன் ...


குறிப்பு:
உண்மை மிகவும் ஆழமானது ,தோண்டிப்பார்க்க யாரும் இல்லையா உலகில் ....

எழுதியவர் : பா.புகழேந்திரன் (27-Nov-14, 10:05 am)
சேர்த்தது : பா . புகழேந்திரன்
பார்வை : 60

மேலே