ஆத்திரம்
யாத்திரை சென்று கொண்டுருக்கும்போது
மாத்திரை கொண்டுப்போக மறந்து விட்டேன் !
இப்போது என் மூத்திரப் பை சொல்கின்றது - உனக்கு
சர்க்கரை சகட்டு மேனிக்கு உச்சத்திலிருக்கிறது !
என் யாத்திரை மீது நான் ஆத்திப்பட்டேன்,
அப்போதும் என் மூத்திரப் பை சொல்கிறது
அட வெட்கம் கெட்ட வாத்து மடயா…
நீ பட்ட ஆத்திரத்தால்
இப்போது உனக்கு பி பீ-யும்
தாரு மாறாய் எகிறிவிட்டது !